admin
admin's Latest Posts
வாழிய மகாத்மா
சத்தியாக்கிரக எழுச்சி மீண்டு வருமா?
சாதிபேதமற்ற புரட்சி சாதனைத் தொடக்கமா?
சத்தியம் கற்றுக்கொடுத்ததோ ஹரியின் நாடகமா?
நிதமும் விளங்கினாய் பக்தியின் பாத்திரமா?
நாட்டுக்குத் தந்தையாய் அடைந்தது பாக்கியமா?
நாட்டுக்காக அறப்போர் நடத்தியது மறப்போமா?
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்…..
”இவர் எப்பவும் இப்படித்தான், சொல் பேச்சுக் கேக்கறதே இல்லை. தன் பொண்டாட்டி, குழந்தை குடும்பம்னு ஏதாவது நெனப்பு இருந்தாத்தானே.. பரோபகாரம், மத்தவாளுக்குச் சேவை செய்ரோம் பேர்வழின்னு, சொந்தக் குடும்பத்தைப் பத்திக் கவலையே இல்ல”…. சரஸ்வதி மாமியின் புலம்பல் தொடர, பொழுது புலர்ந்தது என்ற எண்ணத்துடன் பதில் எதுவும் கூறாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று கிளம்பத் தயாரானார் சாம்பு மாமா. தனது மஞ்சள் பையில், தர்பை, பூணூல் எனத் தர்ப்பணத்திற்குத் தேவையான பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டார். […]
திருப்புறம்பியம்
காவிரியின் கிளை நதியான மணியாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையே அமையப்பெற்ற வளமையான ஊர் திருப்புறம்பியம். சோழர் வரலாற்றை மாற்றியமைத்த பெருமை இவ்வூருக்கு உண்டு. பல்லவரும் பாண்டியரும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது.விசயாலயச் சோழர் தஞ்சையை முத்தரையரிடம் இருந்து கைப்பற்றித் தலைநகராக ஆக்கி பல்லவர்களுடன் நட்புடன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலம்.ஆதித்தச் சோழர் இளவரசுப் பட்டம்மேற்று சோழச் சிற்றரசை சோழப் பேரரசாக ஆக்க கனவு கண்டுகொண்டிருந்த காலம். பாண்டிய நாட்டின் வட எல்லையாகவும் பல்லவ நாட்டின் தென் எல்லையாகவும் சோழநாடு […]
JUST JESS
சாலை நெளிந்து வளைந்துச் சென்றுக் கொண்டிருந்தது. நடுநிசியைக் கடந்த நேரம். அடர்த்தியான மேகங்களிடையே தனது ஒளிக்கதிரை எப்படியாவது செலுத்தி விட நிலவு முயன்று கொண்டிருந்தது. சாலையின் இருபக்கங்களிலும் வளர்ந்திருந்த அடர்ந்த மரங்கள் மேகத்தைக் கடந்து விழுந்த ஒரு சில ஒளிக்கீற்றையும் தரையில் விழுந்திடாதவாறு மறித்திருந்தது. வினோத்தின் காரிலிருந்து விழுந்த வெளிச்சம் மட்டும் அந்த கும்மிருட்டை இரண்டாகப் பிளந்து கொண்டு போய்க் கொண்டிருந்தது. அவ்வப்போது வெளிச்சத்தை நோக்கிப் பறந்து வந்த சின்ன பூச்சிகள் கார் காற்றைக் கிழித்துக்கொண்டு வரும் […]
கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் – தீஞ்சுவை தரும் தத்துவ நன்முத்தா? தேனமுதூறும் தெவிட்டாத காதலா? இந்தியத் தேசத்தில் திரைப்படங்கள் தொடங்கி நூறு ஆண்டுகள் முடிவடைய இருக்கின்றது. இந்த நூறு ஆண்டுகளில், திரைப்படங்கள் பல பரிமாணங்களைக் கடந்து பயணித்துள்ளது என்பது நாமறிந்ததே. இந்தப் பயணத்தில் பல வெற்றி தோல்விகளைச் சந்தித்த திரைப்பட உலகம், ஒரு சராசரி இந்தியனின் முழுநேர வாழ்க்கையையும் கிட்டத்தட்ட முழுமையாக ஆட்கொண்டு விட்டது என்றே கூறலாம். நல்லதோ, கெட்டதோ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை, பாடலை, […]
மகாத்மா
உலகில், நோம்பு நோற்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததே இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமானதற்குக் காரணம் என்பது வள்ளுவனின் கூற்று. சாப்பாட்டைக் குறைத்து, ஏதோவொரு கடவுளின் பெயரை நாள் முழுதும் சொல்லிக் கொண்டிருப்பதல்ல வள்ளுவன் கூறும் நோம்பு. செயல் திருத்தம் என்பதே நோம்பு எனும் தமிழ் வார்த்தையின் சிறப்புப் பொருள் மற்றும் தத்துவார்த்தமான விளக்கம். தான் செய்யும் தவறுகளை உணர்ந்து, செய்யும் செயல்களைத் திருத்திக் கொண்டு நல்வழிப் படுவது என்பது நோம்பாகும். அதுபோல் நல்வழிப் படுபவரின் எண்ணிக்கை குறைவதே, பொருளில்லை, புகழில்லை, மகிழ்ச்சி இல்லை, அமைதி இல்லை எனப் பலவகையானவை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்பது வள்ளுவனின் விளக்கம்.
எமது இலத்திரனியல் உலகமும் அதன் பரிவிளைவும்
இன்று நமது அன்றாட வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் நமது அவதானமானது பல்வேறு இலத்திரனியல் சாதனங்களினை நாடியே உள்ளது. நமது தற்போதய காலத்தை இலத்திரனியல், அறிவியல், தொடர்பியல் முன்னேற்ற நூற்றாண்டாக எடுத்துக்கொள்ளலாம். இதை இந்தத் தசாப்தத்தில் பிரதானமாகத் தரும் சாதனங்கள் இலத்திரனியல் கைத்தொலைபேசி, கைப்பலகை ஆகியன. இச்சாதனங்கள் சென்ற நூற்றாண்டில் வர்த்தகமானிகளால் வகுக்கப்பட்ட அபிவிரித்தியடைந்த, அபிவிரித்தியடைந்து கொண்டிருக்கும், மற்றும் இருண்ட கண்ட நாடுகள் சகலத்தையும் ஊடுருவித் தொடுக்கிறது. தகவல் பரிமாற்றம், தொலைத் தொடர்புத் தொழிநுட்ப மேம்படல், சாதாரண மக்கள் […]
வாங்க ஃப்ரீயா பேசலாம்
“என்ன அண்ணாச்சி? சொகமா இருக்கீயளா?” “அடடே .. வாடே மாப்ளே .. நல்லா இருக்கம்டே. என்னடே விடியாலைல வேட்டியெல்லாம் கட்டி அசத்தறீரு? இங்கிட்டு என்ன வெய்யிலா அடிக்கி? வெறக்கீயில்லா?” “பண்டிக நாளல்லா.. வேட்டி கட்டியாகோணுமுன்னு ஊர்லேருந்து ஆத்தா தாக்கீது அனுப்பிருச்சு .. “ ”அப்படித்தாம்ல நடந்துகிடோனும்… கெடக்கட்டும் … ஏது இந்தா தூரம்?” “சும்மாதாம் … கனநாளாச்சுல்லா இந்தப் பக்கம் வந்து ..” “ஆமாம்லே.. கடையில கொள்ளச் சோலி கெடக்கும் ..அங்கன போய் வாறதுக்கே நேரம் வெருசா […]
காட்டரிசிக் கஞ்சி
மினசோட்டா ஆதிவாசிகளும் காட்டரிசியும் தெற்காசியக்கண்டத்தவராகியத் தமிழர்க்கு பண்டயக்காலத்தில் இருந்து இன்றுவரை உணவில் நெல் அரிசி பிரதானமான தானியம். இதே போன்று மினசோட்டா வாழ் ஆதிவாசி மக்களுக்கும் அத்தியாய தானியம் காட்டு அரிசியே. மினசோட்டா மாநிலப் பிரதான காட்டரிசி்ப்பிரதேசம். இதை தமது மொழியில் மனோமின் Manomin (Zizania aquatic L.) என்று அழைக்கின்றனர்.இம்மக்கள் ஏரி, குளக்கரைகளில் தாமாகவே விளையும் காட்டு அரிசியைக் கடவுள் பாக்கியம் என்று எடுத்துக்கொள்வர். இந்த புல்லு வகையைச்சேர்ந்த தாவரங்கள் மினசோட்டா, அயல் அமெரிக்க, கனேடிய […]
பழங்கஞ்சி
கிராமப் புறங்களில் தயாரிக்கப்படும் காலை உணவுகளில் பழஞ்சோறு முதியத் தலைமுறைகளில் முக்கியமானதொன்று. சோறு அல்லது சாதம் எனப்படும் பகல் நேர உணவுக்காக அவித்த அரிசியின் மீதியை இரவில் சிறிதளவுத் தண்ணீரை ஊற்றி உலைப்பானையில் வைக்கப்படும். இது சாதாரணச் சூழல் வெப்பநிலையில் குளிர்ச்சாதன ஒழுங்குகள் இல்லாமல் இரவு சற்றுப் புளிக்க விடப்படும். காலையில் சிலர் உப்பு, தயிர் மற்றும் ஊறுகாயுடன் சாப்பிடுவர். யாழ்ப்பாணக் கிராமப் புறங்களில் தேங்காய்ப்பால் விட்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் அரிந்துப் போட்டுச், சற்று […]







