admin
admin's Latest Posts
ஒரு “டீ” பரிணாமம்
மாலை வெயில் இன்னும் குறையவில்லை. மினசோட்டாவில் கோடைக்கால வருகையைப் பறைசாற்றும் விதமாக ஆறு மணியாகிவிட்டிருந்தாலும் இன்னும் சுள்ளென்று முகத்தில் வெயில் அடித்து மணி மூன்று போல காட்டியது. வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே நுழைந்தாள் மது என்ற மதுரம். வழியில் பூத்துக் குலுங்கத் தொடங்கியிருந்த மலர்கள் இதமாக இருந்தது. கைப் பையை எடுத்துக் கொண்ட பொழுது, அதிலிருந்து அலைபேசி “கிர்ர்” என்று அடித்தது. எடுத்து கையில் பார்த்தாள். “ஹே கங்க்ராட்ஸ் பா ” […]
மினசோட்டாவின் இசை சமூகம்
மினசோட்டாவின் இசை சமூகம் குறித்து திருமதி. லஷ்மி சுப்ரமணியனிடம் இந்த உரையாடலில் கலைமாமணி திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்கள் பகிர்கிறார். பேட்டி எடுத்தவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒருங்கிணைப்பு – திரு. ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு & இயக்கம் – திரு. சரவணகுமரன் இது ஒரு பனிப்பூக்கள் தயாரிப்பு
கலைமாமணி நிர்மலா ராஜசேகருடன் உரையாடல் – பாகம் 2
தமிழ்நாடு அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது பெற்றுள்ள திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் நடத்திய உரையாடலின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம்.
தமிழ் கவிதாயினிகள்
உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ் கவிதாயினிகள் குறித்து மதுசூதனனும், சரவணகுமரனும் பேசிய பனிப்பூக்கள் அரட்டை.
கலைமாமணி நிர்மலா ராஜசேகருடன் உரையாடல் – பாகம் 1
தமிழ்நாடு அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது பெற்றுள்ள திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் நடத்திய உரையாடலின் முதல் பாகம்.
மீம் மியாவ் – Invitation for Meme creators
மீம் மியாவ் – உங்கள் கற்பனையை படத்தில் பதிவு செய்யுங்கள், சிறந்தவை நாங்கள் இணையத்தில் பப்லிஷ் செய்கிறோம். அனுப்பவேண்டிய முகவரி : vanakkam@panippookkal.com
தேசம் தெரிந்து கொள்ள விழைகிறது
“பதினெட்டாம்நூற்றாண்டில் வேண்டுமானால் பத்திரிகை மக்களாட்சியின் நான்காம் எஸ்டேட்டாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அது மற்ற மூன்றையும் விழுங்கிவிட்டது. இன்று பத்திரிக்கை ஜனநாயகத்தை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது.” –பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த கவிஞரான ஆஸ்கார் ஒயில்ட் ஊடகத்துறையைப் பற்றிச் சொன்னது இது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் உரிமைகளைக் கண்காணித்துக் காக்கும் காவல் நாயாக (Watch dog)இருக்க வேண்டிய ஊடகத்துறை நிறுவனங்களில் சில, ஆள்பவர்களின் மடியில் அமரும் செல்ல நாயாக (Godi […]
இதயத்தில் முள் தோட்டம் (தொடர் கதை – பகுதி 3)
(பாகம் 2) மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடிவிட்டது. டி.எஸ்.பி ராஜீவுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. எந்தப் பக்கம் சென்றாலும் ஒரு முட்டுச் சுவர்! அவருக்கு மேலிடத்திலிருந்தும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களிலிருந்தும் நிறைய பிரஷர் வர ஆரம்பித்தது. அதனால் சந்தேக நபர்களில் சிலரை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. எந்த ஆதாயமும் இல்லை, அவர்கள் அவரை மேலும் குழப்பும் விதமாகப் புதிய “லீட்ஸ்” கொடுத்தனர். அவரது நேரத்தை மேலும் அது வீணடித்தது. அன்று புதன்கிழமை. […]
பெருந்தொற்றுக்கால இந்தியப் பயணம் – 2
(பாகம் 1) அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த பிறகு, சாதாரணமாக நிகழும் பல விஷயங்கள் முதல் பார்வையில் வித்தியாசமாகத் தெரிந்தன. அனைத்துக் கடைகளும் திறந்து இருக்க, கடைக்காரர்களும் சரி, வாடிக்கையாளர்களும் சரி, மாஸ்க் இல்லாமல், பயம் இல்லாமல் சென்று வந்து கொண்டிருந்தனர். கொரோனா லாக் டவுன் தொடங்கிய காலத்தில், மாஸ்க் போடாத மக்களைப் போலீஸ்காரர்கள் விரட்டி பிடித்து அபராதம் வசூலித்ததை டிவியில் பார்த்திருக்கிறேன். இப்போது போலீஸ்காரர்களே மாஸ்க் போடாமல் கேஷுவலாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, கொரோனாவிற்கு […]







