admin
admin's Latest Posts
யூ-ட்யூப் பிரபலங்கள்

சமூக வலைத்தளங்கள் நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பலரது வாழ்வை மாற்றிப் போட்டுள்ளன. எல்லோரையும் போல் சராசரி வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் பலரை செலிப்பிரட்டிகளாக ஆக்கியுள்ளன. அவ்வாறு பிரபலமானவர்களைப் பற்றிய குறிப்புகளின் தொகுப்பே இது. குறிப்பாக, யூட்யூப் மூலம் தமிழில் பிரபலமானவர்களை இக்கட்டுரையில் காணலாம். சினிமா, அரசியல், சமையல், அறிவியல் எனப் பல துறைகளில் தங்கள் பதிவுகளை யூ-ட்யூப்பில் அளித்துப் பிரபலமானவர்கள் இவர்கள். ப்ளூ சட்டை மாறன் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் இவரது யூ-ட்யூப் சானலான ‘தமிழ் டாக்கீஸ்’க்கு […]
வன்முறை மறுப்பு நாள் – NON VIOLENCE DAY 2018

இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின்149 ஆவது பிறந்த நாள் “வன்முறை மறுப்பு நாள்” (NON-VIOLENCE DAY) என்று கொண்டாடப்பட்டது. மினசோட்டா மாநிலத்தின் தலைநகரக் கட்டிட அரங்கில் இந்த நாளில் ஒரு பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவை இந்திய மினசோட்டா அசோசியேஷன் மற்றும் மினசோட்டாவில் உள்ள மற்ற இந்திய அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தனர். ஸ்ரீவித்யா வைத்தியநாதன் இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். […]
நன்றி நவிலல் நாள் நற்கேள்விகள்

வட அமெரிக்காவில் பிரதானமாக நன்றி நவிலல் நாளில் உண்ணப் படுவது, பன்றி செம்மறி ஆடு வான் கோழி அரிசி உணவு கீழே தரப்பட்டவையில் வழக்கமாக உட்கொள்ளப்படாதது பூசணி மாக்கோது (Pumpkin pie) மசித்த உருளைக்கிழங்கு – (mashed potato) கிரான்பெரி பழவினி ரசம் வற்றாளங்கிழங்கு – (Sweet potato) மேலே கூறப்பட்ட அனைத்தும் நன்றி நவிலல் நாள் அன்று குடும்பத்தவரை விருநதோம்பும் வழக்கம் தொடங்கியது எப்போது? பதினெட்டாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு பதினேழாம் […]
பூரிக்க வைக்கும் மஞ்சள் பூசணியும் பச்சிலையும்

வட அமெரிக்கக் குளிர் மாதங்களில், பனிக் காலத்தில் எம்மை உற்சாகப்படுத்த உணவு வகை உதவி தரும். பனிக் காலத்தில் எமது உடலின் நோய் தடுப்புத் தன்மையை உந்து செய்ய மஞ்சள் (turmeric) திரவியமும், சற்று இதமான இனிப்புத் தன்மையான மஞ்சள், செம்மஞ்சள் நிறப் பூசணியும். சிறு கருநீல கேல் (kale), கீரை போன்ற இலை தழையும் இனிமையாகும். குளிர் காலத்தின் வெயில் இல்லாத் தன்மை நுண்கிருமிகள் ஆதிக்கம் அதிகரிக்க வாய்ப்புக்களை உருவாக்குகிறது. பூசணி பற்றிய சிறு வரலாறு […]
அழகிய ஐரோப்பா – 6

(அழகிய ஐரோப்பா – 5/படகுச் சவாரி) பயணங்கள் முடிவதில்லை லண்டனில் பஸ் மற்றும் ரயிலில் போவது எல்லாம் சர்வசாதாரணம் கிட்டத்தட்ட நியூயோர்க் வாழ்க்கை போலத்தான். அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது ஒரு காரணமாக இருக்கலாம் இன்னொன்று நேர விரயத்தைக் குறைப்பதும். … நாங்களும் இன்று ரயிலில் போவதென முடிவெடுத்தோம். என் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரிதான் எங்களுக்கு வழிகாட்டி. அவள் லண்டன் யூனிவெர்சிட்டியில் ஒரு முதுநிலை மெடிக்கல் ரிசர்ச் மாணவி… அவள் நாளாந்தம் ரயிலில் போய் வருவதால் அவளுடன் போவதில் […]
பட்டாசில்லா தீபாவளி!!

பஞ்சணையில் நாம்துயில பஞ்சத்திலே தனையிழந்து பரிதவிக்கும் நிலையினிலே பலகுடும்பம் இருக்குதிங்கே! பட்சணங்கள் இனிப்புகளென பலவிதமாய்க் கொண்டாடுகையில் பசிக்கொடுமை தாங்காது பட்டிதொட்டி துடிக்குதங்கே! பட்டங்கள் பெற்றிட்ட பட்டிணத்து நீதியரசர்கள் பட்டாசுக்கு விதியமைக்க பட்டதுயர் விளக்கிடுமுன் பச்சிளஞ் சிறார்களும் பள்ளிக்குச் சென்றிடாமல் பட்டாசுத் தொழில்புரிவது பலகாலம் நடப்பதென்று பக்குவமாய் உணர்ந்துநாமும் பழிபாவம் ஒன்றறியா பச்சிளம் பாலகரின் படிப்பினை நெஞ்சிலிட்டு பலர்பேசும் வம்பதனை பயனில்லையென ஒதுக்கிவைத்து பட்டாசில்லா தீபாவளியை பண்போடு கொண்டாடிடுவோம்! – வெ. மதுசூதனன்
அழகிய ஐரோப்பா – 5

(அழகிய ஐரோப்பா – 4/முதலிரவு) படகுச் சவாரி இரவிரவாக கொட்டித் தீர்த்த கன மழையினால் வெக்கை போய் ஒருவித குளிர் காற்று வீசத் தொடங்கியது. காற்றுடன் இடையிடையே மழை பெய்தபடி இருந்தமையால் லண்டன் மியூசியம் பார்க்கப் போவதாக ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஒரு தூக்கம் போட்டு எழுந்தேன். மத்தியானத்துக்குச் சூடான நண்டுக் குழம்புடன் சோறும் மீன் பொரியலும் என்று ஒரு வாரமாக மறந்து போயிருந்த அயிட்டங்களை எல்லாம் ஒன்றாகப் பார்த்தவுடன் வாசனையை மட்டும் […]
ஒரு நாள் இரவு ..

மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. மாலை சுமார் நான்கு மணியளவில் தொடங்கிய பனிப்பொழிவு இன்னும் நிற்கவில்லை. சுழன்று, சுழன்று அடித்த காற்று ஜன்னல் கண்ணாடியைச் சடசடவென அதிரச் செய்தது. தெருவோர மஞ்சள் விளக்கில் நாலாபுறமும் பறந்த பனித்துகள்களுடன், ஏற்கனவே தரையில் விழுந்திருந்த பனியும் கிளம்பி பெரிய பனிப்படலத்தை உருவாக்கியிருந்தது தெரிந்தது. இதுவரையில் ஏழெட்டு அங்குல பனி விழுந்திருக்கலாம். நாளை மாலை வரை இந்நிலை நீடிக்குமெனவும், மேலும் சுமார் ஒண்ணரை அடிக்கான பனிப்பொழிவு தொடருமெனவும் ரேடியோவில் சொன்னார்கள். டேபிளிலிருந்த […]
மாநாட்டுச் செய்தி அறிவிப்பு – சிகாகோ

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது சிகாகோ, இல்லினாய், செப்டெம்பர் 15, 2018. பெருமதிப்புக்குரிய தமிழ் அறிஞர் பெருமக்களே வணக்கம். 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ பெருநகரில், 2019-ஆம் ஆண்டு, சூலை திங்கள் 3 முதல் 7ஆம் நாள் வரை நடைபெற இருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும். […]