admin
admin's Latest Posts
ஐந்தாம் தூண்

மரபுசார்ந்த செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்ற அச்சு, காட்சி ஊடகங்களை அரசாங்கம் ஒருகட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறோம். பத்திரிகைகள் நடத்தும் சுய தணிக்கைகளை மீறி அரசாங்கம் மறு தணிக்கை செய்த ‘அவசர நிலை கால’ கட்டுப்பாடுகளைக் கண்டிருக்கிறோம். அரசாங்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடும் தொலைக்காட்சி சேனல்கள் அரசு கேபிள்களில் காணாமல் போய்விடும். அவதூறு வழக்கு, கிரிமினல் வழக்கு என்று தொடுத்து, பத்திரிக்கையாளர்களை அச்சத்தில் உறைய வைக்கும் யுக்தியையும் அரசாங்கம் கடைப்பிடித்ததுண்டு. வெளிப்படையாகக் கைது செய்ய […]
வருக வருக 5ஜி

2ஜி, 3ஜி, 4ஜி… இது 5ஜி.. என்று ஆறுச்சாமி மாடுலேஷனிலும், ஓங்கி கீ-போர்டுல அடிச்சா ஒன்றரை ஜிபி டவுன்லோடுடா… என்று சிங்கம் போல் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டும் இணையத்தின் அடுத்தத் தலைமுறையான 5ஜி ரெடியாகிக்கொண்டு இருக்கிறது. 5ஜியைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு அதன் மூதாதையர்களைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். ஜி என்பது ஜெனரேஷன் என்று ஒரு தலைமுறையைக் குறிக்கிறது. ஒயர் மூலம் போன் பேசிக்கொண்டிருந்த கற்காலம் தான் 0ஜி காலம். அதாவது, 1940 காலக்கட்டம். அதன் பின்பு, 1980களில் […]
ரோக்கியோவில் கோடைக்காலம்

கோடைக்காலச் சராசரி உஷ்ணமான 35 °C, பச்சைப் பசேல் என்ற பைன், சாலையோர வரிசையான கிங்கோ மரங்கள் மத்தியில் நடந்து செல்கிறார்கள் ரோக்கியோ நகரவாசிகள். ரோக்கியோ நகரத்தின் மையத்தில் உள்ளது பச்சை மைதானம், சக்கரவர்த்தியின் அரண்மனை, அழகிய தொங்குபாலங்கள், பச்சைப் பாசி படர்ந்து, தற்போதும் பயன்படும் கோட்டைகள், மற்றும் அழகிய செர்ரிப் பூ மரங்கள். சக்கரவர்த்தி குடும்பம் இப்போதெல்லாம் பண்டிகைகளுக்கு மாத்திரம் அரண்மனையைப் பயன்படுத்துகிறார்களாம். ரோக்கியோ நகரவாசிகளை விட, மற்ற யப்பானிய மாகாணங்களில் இருந்து வரும் உல்லாசப் […]
ஆயிரங்காலத்துப் பயிர்

“கணேஷ், நோக்கு நெனவிருக்கா… நாம மொதமொதல்ல பாத்துண்டது இந்த மரத்தடியிலதான்”…. பாரதி இந்த வாக்கியத்தைச் சொல்கையில், அவளின் கண்கள் பனித்ததைக் கணேஷ் கவனிக்கத் தவறவில்லை. “யெஸ் பாரதி, கோல்டன் டேஸ்” என்று பொதுவாய்ச் சொல்லி வைத்தான். “லைஃப் எப்படிப் போயிண்ட்ருக்கு, கணேஷ்” பாரதி தொடர்ந்தாள். தங்களது இருபத்தி ஐந்தாம் வருடக் கல்லூரி நிறைவைக் கொண்டாடுவதற்காகக் கூடியிருந்த அனைத்து முன்னாள் மாணவர்களின் குடும்பங்களிலிருந்தும் சற்று நழுவி, தனிமையில் இவர்களிருவர் மட்டும் சந்தித்துப் பேசத் தொடங்கியிருந்தனர். நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் […]
கடவுளின் எல்லையற்ற அன்பு

கடவுள் நம்மேல் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். அன்பு என்பது கடவுளின் குணமாகும், கடவுள் தன் அன்பைத் தம்முடைய படைப்புகளோடு எப்போதும் பகிர்ந்து கொள்கிறார். மனித குலத்திற்கான அவரது அன்பு அவரது படைப்புகளில் வெளிப்படுகிறது. கடவுள் ஆணும், பெண்ணுமாக மனிதரை உருவாக்கினார். மனிதர்கள் பழுகிப் பெருகவும் செய்தார். தன் சாயலாக எண்ணற்ற நல்ல ஆத்மாக்களைப் பெருகச் செய்து, அவர்களைப் பரலோக ராஜ்யத்தில் சேர்த்தார். மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுள் மனிதனுடைய தேவைகளை அறிந்திருந்து […]
பள்ளிக்கூட வழித்தடம்

ஊருக்குக் கிழக்கால, கோயிலுக்குப் பக்கத்துல அமைதியா இருக்குற என் பள்ளிக்கூடம் .. மேற்கால இருக்குற மேட்டுத் தெரு வீதியில ஓலக் குடிச தான் என் வீடு… ஒத்தயடிப் பாத ஒண்ணு , வளைஞ்சு நெளிஞ்சு போயிருக்கும்!! குண்டும் குழியுமா கல்லெல்லாம் நெரஞ்சிருக்கும். காலையில விடியு முன்ன கால் நடையா நடந்தாத்தான் வகுப்பறை மணிக்கு முன்ன வாசலில் சேர முடியும் ஏரிக்கரையோரம் போகயில தாமரப் பூ வாசம் வரும்! கரையோரப் பனமரத்துல இளப்பார நிக்கத் […]
தமிழ்ப் படம் 2.0

இன்னமும் தமிழ் சினிமா சார்ந்த மேடைகளில் பிற நடிகர்களையோ, படங்களையோ பற்றி விமர்சனம் செய்து கருத்துக் கூறுவது அரிது. எதற்கு மல்லாந்து படுத்துக்கொண்டு துப்புவது, கண்ணாடி வீட்டில் கல்லெறிவது என்று காரணம் கூறுவார்கள். நிலைமை அப்படி இருக்கும் போது, பிற படங்களைக் கிண்டல் செய்து எடுக்கப்படும் ஸ்பூஃப் வகைத் திரைப்படங்கள் தமிழில் சாத்தியமா என்ற கேள்வி நெடுநாட்களுக்கு இருந்தது. அதற்கு விடையாக 2010 இல் “தமிழ்ப்படம்” வந்தது. அச்சமயம் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அப்படம் வெற்றியடைந்து நல்ல […]
ஆசை…

வண்ணமாய்ச் சிலதும் வம்புக்காய்ச் சிலதும் சின்னதாய் ஆசைகளைச் சிறகடித்துக் கேட்டபாடல்! எண்ணமும் செயலும் இருவேறாகாத நிலை திண்ணமுற வேண்டுமென்ற ஒன்றதுவே நம்மாசை! நண்பர்கள் பலரும் நயமுடன் பேசுகையில் பண்புடன் ஒருவர் தம்மனது திறந்திட்டார் இன்பமாய் அவர் எப்போதும் எண்ணுவது துன்பங்கள் துறந்த பின்னோக்கிய பயணமாம்!! கம்பும் நெல்லும் வரகும் விளைத்திடும் வம்பும் வழக்கும் நினைந்திடா விவசாயியாய் அன்பும் அழகும் பூத்துக் குலுங்கிடும் என்பும் பிறர்க்கெனும் மக்கள் நிறைந்திட்ட ஏரிக் கரையினில் எழிலான கிராமம் […]
கேன்சஸ் புலிகள் பாதுகாப்பகம்

உலகில் அருகி வரும் உயிரினமான புலிகளைப் பற்றிய தகவல் ஒன்று நம்மையெல்லாம் ஆச்சரியப்படுத்தக்கூடும். உலகிலுள்ள காடுகளில் உள்ள புலிகளை விட, அமெரிக்காவில் தனியார் வசம் சிக்கியுள்ள புலிகள் அதிகமாம். வெளிநாட்டில் இருந்து வரும் மனிதர்களுக்கு ஆயிரதெட்டுக் கட்டுப்பாடுகள் இருக்கும் நாட்டில் புலிகள் போன்ற காட்டுவிலங்குகளுக்கென பாதுகாப்புச் சட்டங்கள் ஏதும் இல்லை. சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வீடுகளில் செல்லப்பிராணியாகவும், காட்சிப்பொருளாகவும் இவ்விலங்குகள் பல பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் இவற்றால் ஆபத்து ஏற்படுவதும் நிகழ்கிறது. நிலைமை இப்படி இருக்க, சட்டப்பூர்வமாகக் […]
ஆறப்போட்ட தோசைக்கல்

’சூடாகிய தோசைக் கல்லை ஆறவிடக்கூடாது’ என்று சொன்னவர் விஜி, மருத்துவர் சம்பந்தத்தின் மனைவி. மருத்துவர் ஜானகிராமனும் மருத்துவர் சம்பந்தமும் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கி ஹார்வர்ட் தமிழ் இருக்கையை வெற்றிகரமாக நிறுவியது எல்லோரும் அறிந்ததே. உலக மக்களிடையே ஹார்வர்ட் தமிழ் இருக்கை ஏற்படுத்திய எழுச்சியை நேரில் கண்ட விஜி சொன்னார், ’இந்த எழுச்சி அலை இருக்கும்போதே ரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கையைத் தொடங்கிவிடவேண்டும்.’ அதன்படியே ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பினர் கனடா தமிழ் பேரவையுடன் […]