admin
admin's Latest Posts
ஜெய்ஹிந்த்
“ஜனா..” “ம்ம்.. சொல்லு ..” “அப்பா போய்ட்டாரு..” சின்னதாக விசும்பினாள் பூனம். “.. எப்போ…”.. “இப்போதான் மூணு நிமிஷம் இருக்கும் ..” “அம்மா எப்படியிருக்காங்க..” “அழுதுட்டே இருக்காங்க… ஒரு நிமிஷம் .. டாக்டர் கூப்பிடறாராம்… முரளி கிட்ட தரேன் .. பேசு..” … “ஹலோ.. ஜனா? ஏ சாரிடா ..எவ்ளோ ட்ரை பண்ணோம்.. ஒன்னும் முடியாதுன்னுட்டாங்க.. சிவியர் நிமோனியா..” “சந்தோஷ் எங்க இருக்காரு இப்போ.. “ “அவருக்கு இன்னும் உதாம்பூர் டிப்ளாய்மென்ட் முடியல.. காலைல கூடப் பூனம் […]
தலைவன் இருக்கின்றான்!
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! இந்த வாக்கியத்தைக் கலைஞர் கருணாநிதி அவர்களின் கரகர குரலினால் இனி நாம் நேரில் கேட்கப்போவதில்லை! காவேரி கரையில் பிறந்தார்…காவேரியில் மறைந்தார் என்ற கடைசி சேதி கேட்டதும் குபுக்கென்று நம்மையும் அறியாமல் கண்ணீர்! வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே ஒரு உருவமில்லா உருண்டை உருவாகியது போல ஒரு பிரமை. நம் சொந்தத்தை இழந்தோம் என்றால் என்ன வலியை அடைவோமோ அது போல பலமடங்கு வலி! ஓய்வறியாச் சூரியனாகத் திகழ்ந்த கலைஞர் அவர்களை உலகெங்கும் […]
வேலை தேடுங்க !!!
அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு! என்ற திருவள்ளுவரின் வாக்குக்கிணங்க, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது பொருட் செல்வமாகும். ஆசைகளைப் பெருமளவு அடக்கி, எளிமையான வாழ்வு நடத்துபவருக்கும் பொருள் என்பது இன்றியமையாததே. முற்றும் துறந்த ஞானியர் தவிர மற்ற அனைவரும், பொருளீட்டும் முயற்சியில் முழுவதும் ஈடுபடுவது புரிந்து கொள்ளக் கூடியதே. அதுபோன்ற பொருளீட்டும் முயற்சியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அவரவரின் திறமைக்கும், தகுதிக்கும் ஒப்ப ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிவதும் உலக வழக்குகளில் ஒன்றே. அவ்வாறு […]
நட்புக்கான நந்நாள்
பசியென்றால் பகர்ந்திடலாம் அன்னையிடம் – அவளும் புசியென்றே படைத்திடுவாள் அறுசுவை விருந்து!! படித்தாலும் புரியவில்லை, கோரிடலாம் தந்தையிடம் அடித்தாவது விளக்கிடுவார் அரும்பொருள் அவரும்!! மன்மதனின் பாணமது மார்நோக்கிப் பாய்கையிலே மறுகேள்வி ஏதுமின்றி மகிழ்விப்பாள் மனைவியவள்!! வீதியில் செல்கையில் வீணர்களுடன் சண்டை – அண்ணன் பாதியில் ஓடிவந்து பகைவர்களைத் துரத்துவான்!! வளர்ந்தபின் மனதிலே சிற்சில கிலேசம் – அக்காள் தளர்ந்திடாதே தம்பியென நம்பிக்கை தந்திடுவாள்!! பற்றாக் குறையெனப் பகந்திட்டால் தம்பியவன் வற்றாத செல்வத்தை வாரி வழங்கிடுவான்!! அன்பிற்குச் சிலநாள் […]
ஆர் யு ஹங்ரி 2018 ஆம் ஆண்டு 5 / 10 மைல் ஓட்டம்
ஆகஸ்ட் 5ம் தேதி ஆர் யு ஹங்ரி (Are you hungry MN) சார்பில் ஐந்து மற்றும் பத்து மைல் ஓட்டப் பந்தயம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஈடன் ப்ரைரே (Eden Prairie) நகரத்திலுள்ள புர்கடோரி க்ரீக் பூங்காவில் (Purgatory Creek Park) நடைபெற்றது. இப்போட்டியை “ஆர் யு ஹங்ரி” நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் 5 மைல் ஓட்டம் முதல் இடம் ஜாக் லார்சன் (JACK LARSON) இரண்டாவது இடம் […]
ஐந்தாம் தூண்
மரபுசார்ந்த செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்ற அச்சு, காட்சி ஊடகங்களை அரசாங்கம் ஒருகட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறோம். பத்திரிகைகள் நடத்தும் சுய தணிக்கைகளை மீறி அரசாங்கம் மறு தணிக்கை செய்த ‘அவசர நிலை கால’ கட்டுப்பாடுகளைக் கண்டிருக்கிறோம். அரசாங்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடும் தொலைக்காட்சி சேனல்கள் அரசு கேபிள்களில் காணாமல் போய்விடும். அவதூறு வழக்கு, கிரிமினல் வழக்கு என்று தொடுத்து, பத்திரிக்கையாளர்களை அச்சத்தில் உறைய வைக்கும் யுக்தியையும் அரசாங்கம் கடைப்பிடித்ததுண்டு. வெளிப்படையாகக் கைது செய்ய […]
வருக வருக 5ஜி
2ஜி, 3ஜி, 4ஜி… இது 5ஜி.. என்று ஆறுச்சாமி மாடுலேஷனிலும், ஓங்கி கீ-போர்டுல அடிச்சா ஒன்றரை ஜிபி டவுன்லோடுடா… என்று சிங்கம் போல் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டும் இணையத்தின் அடுத்தத் தலைமுறையான 5ஜி ரெடியாகிக்கொண்டு இருக்கிறது. 5ஜியைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு அதன் மூதாதையர்களைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். ஜி என்பது ஜெனரேஷன் என்று ஒரு தலைமுறையைக் குறிக்கிறது. ஒயர் மூலம் போன் பேசிக்கொண்டிருந்த கற்காலம் தான் 0ஜி காலம். அதாவது, 1940 காலக்கட்டம். அதன் பின்பு, 1980களில் […]
ரோக்கியோவில் கோடைக்காலம்
கோடைக்காலச் சராசரி உஷ்ணமான 35 °C, பச்சைப் பசேல் என்ற பைன், சாலையோர வரிசையான கிங்கோ மரங்கள் மத்தியில் நடந்து செல்கிறார்கள் ரோக்கியோ நகரவாசிகள். ரோக்கியோ நகரத்தின் மையத்தில் உள்ளது பச்சை மைதானம், சக்கரவர்த்தியின் அரண்மனை, அழகிய தொங்குபாலங்கள், பச்சைப் பாசி படர்ந்து, தற்போதும் பயன்படும் கோட்டைகள், மற்றும் அழகிய செர்ரிப் பூ மரங்கள். சக்கரவர்த்தி குடும்பம் இப்போதெல்லாம் பண்டிகைகளுக்கு மாத்திரம் அரண்மனையைப் பயன்படுத்துகிறார்களாம். ரோக்கியோ நகரவாசிகளை விட, மற்ற யப்பானிய மாகாணங்களில் இருந்து வரும் உல்லாசப் […]
ஆயிரங்காலத்துப் பயிர்
“கணேஷ், நோக்கு நெனவிருக்கா… நாம மொதமொதல்ல பாத்துண்டது இந்த மரத்தடியிலதான்”…. பாரதி இந்த வாக்கியத்தைச் சொல்கையில், அவளின் கண்கள் பனித்ததைக் கணேஷ் கவனிக்கத் தவறவில்லை. “யெஸ் பாரதி, கோல்டன் டேஸ்” என்று பொதுவாய்ச் சொல்லி வைத்தான். “லைஃப் எப்படிப் போயிண்ட்ருக்கு, கணேஷ்” பாரதி தொடர்ந்தாள். தங்களது இருபத்தி ஐந்தாம் வருடக் கல்லூரி நிறைவைக் கொண்டாடுவதற்காகக் கூடியிருந்த அனைத்து முன்னாள் மாணவர்களின் குடும்பங்களிலிருந்தும் சற்று நழுவி, தனிமையில் இவர்களிருவர் மட்டும் சந்தித்துப் பேசத் தொடங்கியிருந்தனர். நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் […]
கடவுளின் எல்லையற்ற அன்பு
கடவுள் நம்மேல் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். அன்பு என்பது கடவுளின் குணமாகும், கடவுள் தன் அன்பைத் தம்முடைய படைப்புகளோடு எப்போதும் பகிர்ந்து கொள்கிறார். மனித குலத்திற்கான அவரது அன்பு அவரது படைப்புகளில் வெளிப்படுகிறது. கடவுள் ஆணும், பெண்ணுமாக மனிதரை உருவாக்கினார். மனிதர்கள் பழுகிப் பெருகவும் செய்தார். தன் சாயலாக எண்ணற்ற நல்ல ஆத்மாக்களைப் பெருகச் செய்து, அவர்களைப் பரலோக ராஜ்யத்தில் சேர்த்தார். மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுள் மனிதனுடைய தேவைகளை அறிந்திருந்து […]







