கதை
திமிர்ந்த ஞானச் செறுக்கு
“ஏன்னா, என்ன பண்ணிண்டு இருக்கேள்?” … படுக்கையில் அமர்ந்து, லேப்டாப்பை மடியில் வைத்துக் கொண்டு, கூரையைப் பார்த்து, சிந்தித்துக் கொண்டிருந்த கணேஷை இவ்வுலகுக்குக் கொண்டு வந்தது லக்ஷ்மியின் குரல். “ஒண்ணுமில்லடி, ஏதாவது கதை எழுதலாமோன்னு யோஜிச்சிண்டிருக்கேன்…” என்றான். “நல்லதுதான், எழுதுங்கோ.. சும்மா ஃபேஸ்புக்ல அரசியலப்பத்தி எழுதுறத விட்டுட்டு, ஏதாவது உருப்படியா எழுதுங்கோ..” என்றவளை வெறுமையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். மனம் மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது. ஆமாம், இரண்டு வருடங்களாக, கதையோ கட்டுரையோ எழுதவில்லை. ஆனால் அனுதினமும் ஏதோவொரு நிகழ்வைப்பற்றி, […]
இழப்பின் நிழல்கள்
தீம் பார்க்குகள், கேளிக்கை விடுதிகள் என சூழ்ந்திருக்கும் ஆர்லாண்டோ நகரின் விளிம்பில் வண்ண விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது ‘ஐஸ் பார்’ மதுக்கூடம். பகல் நேரப் பரபரப்பை மறந்து அந்திமக் கால நேரத்தைக் கொண்டாட வந்திருந்த கூட்டம், பன்னிரெண்டு மணியைக் கடந்துவிட்ட காரணத்தால் மெதுவாகக் கரைந்துகொண்டிருந்தது. மதுவின் விறுவிறுப்பில் இயல்பை மறந்து சத்தமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த மனிதர்களின் உரையாடல்கள், சீரான முணுமுணுப்பாகக் குறைந்திருந்தன. மூலைகளில் இருந்த வண்ணமயமான நியான் விளக்குகள் அணைக்கப்பட்டதால், அறையின் ஓரங்கள் அடர்ந்த, மங்கலான நிழல்களில் […]
பிடித்ததை விட்டுவிடு
கண்ணாடி கதவுகள் திறந்து லாபிக்குள் நுழைந்ததும், வெளியே இயங்கி கொண்டிருந்த பரபரப்பான உலகம் விடைபெற்றுக் கொண்டது. குறைவான விளக்கொளியிலும் மின்னிய பளிங்குத் தரையில் ரஞ்சனின் காலடிச் சத்தம் சீரான தாளகதியில் எதிரொலித்தது. வரவேற்பு கூடத்தில் அமர்ந்திருந்த பெண் உடனடியாக நிமிர்ந்து உட்கார்ந்தாள். கண்களில் தெரிந்த சோர்வை ஒரு நொடியில் மறைத்து, மிகப்பழகிய, பளிச்சென்ற புன்னகை ஒன்றை முகத்தில் படரவிட்டு,“வெல்கம் டு டிரீம் டவர்ஸ். நான் உங்களுக்கு எப்படி உதவலாம்?” என்றாள், குரலில் தொழில்முறை இனிமையும் சற்று செயற்கையும் […]
காத்து இருப்பு
அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸுக்குள் நுழையும்போதே மணி ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. காரின் ஹெட்லைட் வெளிச்சம் பாய்ந்த இடத்தைத் தவிர அந்த வளாகமே கும்மிருட்டாகயிருந்தது. காலியாக இருந்த பார்க்கிங் இடைவெளியில் கார் நின்று, இஞ்சின் அணைந்ததும், அந்தப் பகுதி முழுதும் இருட்டை அப்பிக்கொண்டது. வண்டியிலிருந்து இறங்கிய மாயா கைபேசியின் ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்துவிட்டு, பின் கதவைத் திறந்து தனது லாப்டாப் பையை எடுத்துக் கொண்டு, அபார்ட்மெண்டின் பிரதான வாயிலை நோக்கி நடந்தாள். தூரத்தில் வானளாவ உயர்ந்திருந்த அதிநவீன வர்த்தக கட்டடங்களின் விளக்குகள் […]
கடவுள் இல்லையே
மேடையில் ஒலிபெருக்கியில் நடன வகுப்புகளின் பெயர்களை அழைத்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர். முதல் வரிசையில், பேத்தியின் நடனத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த மீனாட்சி அம்மாள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். இவளது பேத்தியின் நடனப் பள்ளி தான் அடுத்து ஆடப் போகிறது. ஒலிபெருக்கியில் “இடது பதம் தூக்கி ஆடும் ..” பாடல் ஒலித்தது. பதினைந்து வயது அனன்யா அவளது குழுவுடன் நடனமாடினாள். மீனாட்சி அம்மாளின் முகத்தில் பெருமிதம், புன்னகை எல்லாம் சேர்ந்து கலந்தது. அருகில் இருந்த கணவர் சதாசிவத்திடம் “பாருங்கோ பாருங்கோ , […]
பாட்டி வீட்டுப் பரண் – பகுதி 3
முன் பகுதி சுருக்கம் அமெரிக்காவில் இருந்து ஐஷு பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்காக வருகிறாள். அங்கு பாட்டி வீட்டு தூணில் ஒரு அதிசய படிக்கட்டு இருப்பதை கண்டு அதன் உள்ளே செல்கிறாள். அந்தப் படிக்கட்டு ஒரு பரணில் சென்று விட, ஐஷு அங்கு உள்ள ஒரு புத்தகத்தின் உள்ளே இழுத்து செல்லப் படுகிறாள். … இனி இது என்ன இடம்? தான் எங்கு இருக்கிறோம் என்று ஐஷுவிற்கு புரியவில்லை. ஏதோ பெரிய வீடு. பாட்டி வீடா இது […]
பாட்டி வீட்டு பரண் – பகுதி 2
முன் பகுதி சுருக்கம் அமெரிக்காவில் இருந்து ஐஷு பாடி வீட்டிற்கு விடுமுறைக்காக வருகிறாள். அங்கு பாட்டி வீட்டு தூணில் ஒரு அதிசய படிக்கட்டு இருப்பதை கண்டு அதன் உள்ளே செல்கிறாள். இனி .. இயல்பிலேயே ஐஷு ஒரு துறு துறு பெண். அதனாலேயே அந்த தூண் திடீரென்று பிளவு கொண்டு அதில் படிக்கட்டுகள் தெரிந்த போது பயம் இல்லாமல் அதில் காலை வைக்க முடிந்தது. வளைந்து வளைந்து சென்ற அந்தப் படிகளில் பழைய ஒட்டடைகள் இருந்தது. அதை […]
பாட்டி வீட்டு பரண் – பகுதி 1
“என் பேத்தி பொண்ணே.” பதில் வர வில்லை. “என் அம்மு பொண்ணே”. பெருங்குரலில் கூப்பிட்டாள் பாட்டி பதில் வர வில்லை. நமுட்டு சிரிப்பு சிரித்தபடி பாட்டி வேணுமென்றே ,”என் ஐஸ்வர்ய சுகந்தம்மா ” என இழுக்க . “No… Call me Ash.” என்று சிணுங்கிய படி ஒன்பது வயது பெண் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியில் வந்தாள். “ஆஷ் ஆ? அப்படினா சாம்பல் இல்ல. என் தங்கத்தை எப்படி அப்படி கூப்பிடுவேன்” “இந்த ஐஸ்வர்யம் சுகந்தம் […]
கேட்பரீஸ்…
“ஏன்னா … கேட்டேளா இந்தக் கதைய?” – வழக்கமான ராகத்துடன் லக்ஷ்மியின் கேள்வி வந்து விழ, அன்றைய தினசரியை மேய்ந்து கொண்டிருந்த கணேஷ் தலையை நிமிர்த்தி, கண்ணாடியை மூக்கின் மத்தியப் பகுதிக்குச் சற்று இறக்கி, அதற்கு மேலே கண்களை ஊடுருவி, அவளிருக்கும் திசை பார்த்து, “என்னடி, என்ன ஆச்சு?” என்றான். “வேலண்டைன்ஸ் வீக் பத்தித் தெரியுமான்னா?” – தனது மொபைல் ஃபோனில் வந்து குதித்த லிங்க்கின் மூலம் படித்துத் தெரிந்து கொண்டு அவனிடம் கேட்டாள். “என்னா, வீக்கா?” […]
குவளைப்பாட்டி
காலை நேர பதட்டம். வேகமாக கல்லூரி போக தயாராகிக் கொண்டு இருந்தாள் அதிதி. வெளியில் அம்மாவின் கால்கள் தையல் இயந்திரத்தில் ஒட்டிய சத்தம் காதை கிழித்தது. அந்த சத்தம் பழகி போன எரிச்சலை கொடுத்தது அதிதிக்கு. சமையல் அறையின் உள்ளே சென்று மதிய உணவை நோட்டம் விட்டாள். அம்மா கொடுத்த மதிய உணவை எடுக்காமல் திருட்டுத் தனமாக கிளம்பினாள். “அதிதி. மத்தியானம் தயிர் சாதம் வெச்சுருக்கேன். எடுத்துட்டு போ. உடம்பு சூடு ஆகுது. வெளில சாப்பிட வேண்டாம்”. […]






