வார வெளியீடு
திருமதி. ‘ஆகாச’ வேணி
2021 சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை “ஒரே தலையிடியா இருக்கே, புரூ காபி குடிச்சா தான் ஆகும்” என்றபடி துயில் கலைந்து எழுந்தாள் வேணி சுற்றும் முற்றும் பார்த்து குழம்பியவள், “நா எங்கிருக்கேன்? இது எந்தூரு? எங்கிருக்கீங்க மாமா?” என பதறியபடி எழுந்தமர்ந்தாள் “பெண்ணே” என்றபடி ஒரு வெண்தாடி உருவம் அருகே வர .. “யாருங்க நீங்க? வள்ளுவர் தாத்தா மாதிரி இருக்கீங்க” “நான் வள்ளுவனல்ல பெண்ணே, வல்லவன்” “அது சிம்பு நடிச்ச படமாச்சே” “யாரவன் சிம்பு?” “டி.ஆர் புள்ள” “டி.ஆரா?” “என்னங் […]
பத்மஸ்ரீ காயத்ரி சங்கரனுடன் உரையாடல்
பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இசை கலைஞர் முனைவர் திருமதி. காயத்ரி சங்கரன் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் அவர்கள் நடத்திய இசை அனுபவம் குறித்த உரையாடலை இங்கு காணலாம். தொகுப்பு – சரவணகுமரன்.
முதிர்காதல்
புத்தாடை அணிந்து புறப்பட்டுச் செல்கையில் புழுதி பறந்திடும் புல்லட்டின் வேகத்தால்! புரவியில் விரைந்திடும் புருஷோத்தமன் என புன்னகை மத்தியில் புருஷனாய் வரித்திட்டாள்! நடைபாதை போகையிலே நளினமாய்த் தொடர்ந்திடுவான்! நகைத்துத் திரும்பிடிலோ நயமாய் மறைந்திடுவான்! நமுட்டுச் சிரிப்புடனே நயனமிவன் மீதிருக்க நம்பிக்கை ஒளிதந்து நட்பாய் இதழ்குவித்தான்!! காலையில் எழுகையில் காளையின் நினைப்பு! கால்வண்டிப் பயணத்தில் காதலனைத் தேடல்! காலம் முழுக்கக் காதலாய் வாழ்வோமென காரிகை அவளும் காந்தர்வமாய் மணந்திட்டாள்! வழிபாட்டுத் தலங்களிலும் வழிபடும் வேளையிலும் […]
Dr.டேஷ் நிறுவனத்தின் தொண்டு உதவி
டாக்டர் டேஷ் (Dr.Dash Foundation) தொண்டு நிறுவனமானது வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தொண்டு நிறுவனமானது சேவை மனப்பான்மையுடன் பல்வேறு அமைப்புகளுக்கும், இந்திய அமைப்பு நிறுவனங்களுக்கும், அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் இசை இயல் நடனங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. முக்கியமாக இந்த நிறுவனத்தை நடத்துபவர் டாக்டர் டேஷ் என்பவர் மினசோட்டாவில் அமைந்துள்ள ஹிந்து மந்திர் கோவில் அவைத் தலைவராக (Chairman) உள்ளார். பொதுவாக டிசம்பர் மாதங்களில், விடுமுறை தினக் கொண்டாட்டங்களுக்கிடையே மக்கள் பரிசுகளை […]
பசைமனிதன்
“நீ புடுங்குனது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்” அப்படி’ன்னு சொன்னா அது எப்போதும் உண்மையாக இருப்பதில்லை. இப்படித் தான் 1968 ஆம் ஆண்டு மினசோட்டாவின் 3M நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்பென்சர் சில்வர் (Spencer Silver) என்ற ஆராய்ச்சியாளர், விமானப் பாகங்களில் பயன்படுத்துவதற்கான, நன்றாக வலிமையாக ஒட்டும் தன்மையில் ஒரு பசையைக் கண்டுபிடிக்க முயற்சிக்க, அந்த நோக்கத்தை அடைய முடியாமல், மிகவும் இலேசாக ஒட்டும் பசையைத் தான் அவரால் உருவாக்க முடிந்தது. இந்த மிதமான பசையை ‘தேவையில்லாத ஆணி’ என்று […]
நான் ஒரு தடவை முடிவு செஞ்சிட்டா….
2021ஆம் ஆண்டு பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை ‘அய்யயோ என்னால முடியல. Zumba வும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்’ என்று அடுத்த வகுப்புக்கெல்லாம் போகாம இருக்கவில்லை. தொடர்ந்து போனேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த ஒரு மணி நேரம் வியர்வை சொட்டச் சொட்ட உடற்பயிற்சி மாதிரி அதை செய்திட்டு வந்தது மனசுக்கு உற்சாகமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருந்தது. எனவே நாம ஏதாவது ஒன்னு புதுசா செய்யனும்னு ஆசைபட்டாலோ அல்லது ஏதாவது வகுப்புல சேரணும்னு ஆசைபட்டாலோ […]
ஓடிடியின் ஓட்டம்
பெருந்தொற்றுக் காலத்தில் லாக்டவுன் என்பது பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. முக்கியப் பொழுதுபோக்கு துறையான திரையரங்கு வணிகத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. அதே சமயம், ஓடிடி என்ற பொழுதுபோக்கு துறைக்கு இது வசந்த காலமாகிவிட்டது. பல ஆண்டுகளாக இத்துறை இயங்கி வந்தாலும், கோவிட்-19 இத்துறையின் முன்னேற்றத்தைத் தூண்டி விட்டுக் கேம் சேஞ்சராக உதவியது. தெருக்கூத்து, நாடகம், திரைப்படம், தொலைகாட்சி, சிடி, டிவிடி என்று கலை படைப்புகள் நம்மை வந்து சேரும் முறைகள் காலத்துடன் மாறிக் கொண்டே தான் […]
வெங்காயம் வெட்டும் விதம்
கோடை காலம் வருகிறது உள்வீட்டு சமையல் அறையிலும் விசாலமாக வெளியிடங்களிலும் ஒன்று கூடி சமைத்து மகிழ்வது வடஅமெரிக்க வழக்கம். வெங்காயங்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை எனப் பலவகைப்படும். ‘ஏலியம் சீப்பா’ (Allium Cepa) என்பது வெங்காயத்தின் தாவரவியல் பெயர். வெங்காயமானது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய ஆசியாவிலும் அதன் அருகாமை நாடுகளிலும் பயிராக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்கிறது சரித்திரம். தமிழர்கள், வெங்காயம் இல்லாமல் சாப்பிடுவது மிகக் குறைவே. இன்று வெங்காயம் வெட்டுவது பற்றியான கைமுறையைப் பார்ப்போம். இதே […]
புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 2
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய அரசு குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடி வரும் வலையொலி பகுதி தொடர்கிறது. இந்தப் பகுதியில் புதிய அமைச்சரவை குறித்தும், புதிய அரசின் முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் திரு. ரவிக்குமார் அவர்கள் பேசியுள்ளார். கேளுங்க.. பகிருங்க..
கோவிட் தடுப்பூசி பயமா? இதைக் கேளுங்க!!
கோவிட் தடுப்பூசி மீதான பயத்தையும், தயக்கத்தையும் போக்கும் வகையில் இந்த வலையொலி பகுதியில், யூனிவர்சிடி ஆஃப் மினசோட்டாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் திருமதி. அமுதா முத்துசாமி அவர்கள் தடுப்பூசி குறித்து எளிமையான முறையில் விளக்கம் தந்துள்ளார். கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.






