வார வெளியீடு
யார் இந்த கமலா ஹாரிஸ்?
2020 அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களின் பின்புலம் குறித்தும், அவர் கடந்து வந்த பாதை குறித்தும் இந்த வலையொலிப் பகுதியில் திரு. ரவிக்குமார் அவர்கள் விவரித்துள்ளார். திருமதி. ஹாரிஸ் அவர்களின் தேர்வுக்கான காரணம் மற்றும் அவருடைய தேர்வு இந்தத் தேர்தல் களத்தில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் போன்றவை குறித்தும் இந்த உரையாடலில் அலசப்பட்டுள்ளது. வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
2020-இல் அந்த ஏழு நாட்கள்
ஞாயிறு காலை: சென்னையில் விரல்விட்டு எண்ணுமளவுக்கு பெரிய புள்ளிகளில் ஒருவர். சக்ஸஸ்ஃபுல்லாக பல தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டிருக்கும் முதலாளி கண்ணன் மற்றும் அவர் மனைவி இருவரும் மருத்துவமனையில் மிகுந்த கவலையுடன் ICU கதவையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். காரணம், அவர்களின் மகள் சந்தியா நேற்றுக் காலைதான் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவள் கொரோனா என்ற கொடிய நோயினால் பாதிக்கபட்டு, மூச்சுவிடக் கூடக் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தாள். அவளுக்குச் சிறு வயதிலிருந்து ஆஸ்த்மா இருந்தது. இருபத்தி ஏழு வயது ஆகியும் […]
கமலா ஹாரிஸ்
பொதுவாகவே அமெரிக்க அரசியலையும், அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் பல உலக நாடுகள் கவனித்து வருவதுண்டு. அமெரிக்க அதிபர் தேர்தல் சமயங்களில் இது மேலும் பரபரப்படையும். இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்தல், உலக அரங்கில், குறிப்பாக ஆசிய, இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில் இந்தியர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இத்தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் அக்கட்சி முன்னிறுத்தியிருக்கும் வேட்பாளரான கமலா ஹாரிஸ். இக்கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோசப் பைடனை காட்டிலும் கமலா ஹாரிஸின் […]
ஓர் அன்பு வேண்டுகோள்
2020 ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்சினை அளிக்கும் ஆண்டாக இருக்கையில், மினசோட்டாவில் வசித்துவரும் விஜயின் குடும்பத்திற்குப் பேரிடி கொடுத்த ஆண்டாக அமைந்துவிட்டது. சென்னையைச் சேர்ந்த 35 வயதான விஜய் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்குப் பலரையும் போல கணினி வேலை நிமித்தம், அவருடைய குடும்பத்துடன் வந்தார். அவருடன் அவருடைய மனைவியும், ஐந்து வயதான மகனும் மினியாபொலிஸ் நகரத்தில் வசித்து வருகின்றனர். நான்கு மாதங்களுக்கு முன்பு, அவருக்கு உணவுக் குழாயில் கேன்சர் நோய் இருப்பது கண்டறியப்பட்டு, யூனிவர்சிட்டி ஆஃப் […]
மின்னூல் – அ முதல் ஃ வரை – என். சொக்கன்
மின்னூல்கள் (Ebooks) பற்றியும், அவற்றை கிண்டில் போன்ற தளங்களில் பதிப்பிப்பது பற்றியும் இந்த உரையாடலில் எழுத்தாளர் திரு. என். சொக்கன் (www.nchokkan.com) அவர்கள் விளக்கமாகப் பேசியிருக்கிறார். காணுங்கள்… பகிருங்கள்… இந்தக் காணொளி உரையாடல் குறித்த உங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உரையாடியவர் – சரவணகுமரன்
இந்தியச் சுதந்திரம் – சில வாதங்களும் விளக்கங்களும்
பனிப்பூக்கள் வாசகர்கள் அனைவருக்கும் பனிப்பூக்களின் இந்தியச் சுதந்திர நாள் வாழ்த்துக்கள். இன்றைய தினத்தில் இந்தியச் சுதந்திரம் குறித்து பொதுத்தளத்தில் வைக்கப்படும் சில வாதங்கள் குறித்து இந்த வலையொலி பகுதியில் திரு. மதுசூதனன் அவர்கள் தனது பார்வையை முன்வைத்துள்ளார். வாசகர்கள் தங்களது கருத்தினை பின்னூட்டப் பகுதியில் வெளிப்படுத்தலாம். தொகுப்பு – சரவணகுமரன்.
கல்லூரிச் செலவிற்குத் தயாரா?
அமெரிக்காவில் அரசு மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரிப்பணம் மூலம் பள்ளிக்கல்வி இலவசமாக மக்களுக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசு வரிப்பணத்தில் 8% கல்விக்காகச் செலவிட, மீதி செலவை மாநில அரசின் வரிப்பணத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறார்கள். கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் இருந்தாலும், அதில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவே. பள்ளிக்கல்வி இலவசமாக அளிக்கப்படும் அமெரிக்காவில் கல்லூரி கல்விக்கான கட்டணம் மிக அதிகம். அதையும் இலவசமாக அளிக்கலாமே என்று கேட்டால், அதற்கேற்ப மக்களால் வரி அதிகமாகக் கட்ட முடியுமா […]
அமெரிக்காவில் ஆடி மாதத்தில் அம்மனுக்குத் திருவிளக்குப்பூஜை
தமிழ்நாட்டில் பொதுவாகக் கோவில்களில்தான் விளக்குப்பூஜை செய்வார்கள். 2002-ஆம் ஆண்டில், இங்கு அமெரிக்காவில், செயிண்ட்லூயிஸில், ஒரே அடுக்கு மாடி இல்லங்களில் (apartment homes) இருந்த தோழிகள் நாங்கள் சேர்ந்து வீட்டில் விளக்குப்பூஜை செய்யலாம் என்று பேசினோம். அதன்படி, விநாயகர் துதியில் ஆரம்பித்து, ஹனுமான் சாலீசா, கந்தசஷ்டி கவசம், அஷ்டலஷ்மி ஸ்லோகம், மஹிஸாசுர மர்த்தினி (தமிழில் ‘உலகினைப் படைத்து’ என ஆரம்பிக்கும்), அதன் பிறகு 108 அம்மன் போற்றி, பிறகு மங்களம் என ஸ்லோகம் பட்டியல் தயார் செய்தோம். ஆரம்பத்தில் […]
மாஸ்க் மகோன்னதங்கள்
ஒரு கடைக்குள் நுழைந்தோமானால், நாம் காணும் அனைவரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். முகத்தில் கண்கள் மட்டும் தெரிகிறது. அதிலும் சந்தேகப் பார்வை. இல்லை, அப்படியும் சொல்ல முடியாது. என்ன நினைக்கிறார்கள், நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்களா, முறைக்கிறார்களா என ஒன்றும் புரியவில்லை. சினேகமாக எப்போதும் போல் மற்றவர்களைக் காணும் போது புன்னகைக்கிறோம். நாம் புன்னகைப்பது அவர்களுக்குத் தெரியாது என்று புரிந்தும் சிரித்து வைக்கிறோம். அந்த நட்பான புன்னகை நமது மாஸ்கினுள் அடக்கமாகி விடுகிறது. கர்ம சிரத்தையாக, பெரும்பாலோர் மாஸ்க்குடன் […]
எது தான் சரி?
மதிய வெய்யில் சுட்டெரித்தது. வீட்டின் வாசலில், அந்த மர நாற்காலி இன்னும் சுட்டெரித்தது. ராமசாமி தாத்தாவிற்கு தொண்டை வறண்டது. சின்ன கமறல் எழுப்பினார். கையில் இருந்த செய்தித்தாளை மடித்து வைத்து யோசித்தார். உள்ளே இருந்து பாக்யம் லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்தார். “நான் கேட்கவே இல்லை ஆனால் எனக்கு தண்ணீர் வேணும்னு உனக்கு எப்படி தான் தெரியுதோ ?”. அ கேட்டு தான் கொடுக்க வேண்டுமா ? சின்ன புன்னகை மட்டும் பூத்து விட்டு உள்ளே செல்ல […]






