\n"; } ?>
Top Ad
banner ad

Archive for February, 2013

தஞ்சை வரலாறு

தஞ்சை வரலாறு

இஞ்சியும் மஞ்சளும் கொஞ்சித் தவழும் தஞ்சை மாநகர். என்னடா தஞ்சை மாநகர்னு சொல்லுறான், அது ஒரு சின்ன நகரம் அவ்வளவுதானே என்று நினைச்சிங்கன்னா உங்களுக்கு இந்தக் கட்டுரை வியப்பா இருக்கும். இன்னைக்கு மாநகர்ன்னு சொல்ற முக்கால்வாசி நகரங்கள் உருவாவதற்கு முன்னாடியே  தஞ்சாவூர் ஒரு மாநகர். அதுவும் சும்மா இல்ல, தெற்காசியாவின் மிக முக்கியமான மாநகர். ஒரு உவமைக்குச் சொல்லனும்னா இப்போ இருக்கிற வாஷிங்டன் மாதிரி. இந்த ஊர் தலைநகரா இருந்த போது இதன் ஆட்சிக்குக் கீழ் இருந்த […]

Continue Reading »

சூப்பர் போல்

சூப்பர் போல்

நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பார்ட்டி கொடுப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே திட்டமிடும் திருநாளைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இரவு உணவுக்கு பீட்சா வேண்டுமென்றால் ஐந்து தினங்களுக்கு முன்னரே ஆணையிட வேண்டுமென்று அறிவீர்களா? இந்திய உணவகத்திற்கு கொறிக்கும் பதார்த்தங்களை ஆர்டர் செய்வதற்காக அரை மணி நேரம் தொலை பேசியில் காத்திருந்த அனுபவமுள்ளதா? மது பானக்கடையில் வாங்கியவையனைத்திற்கும் பணம் செலுத்துகையில், “சொந்த உபயோகத்திற்காக மட்டுமே வாங்குகிறேன், சில்லறை வியாபாரத்திற்காக அல்ல” என்று கையொப்பமிட வேண்டிய கட்டாயமிருந்ததுண்டா? நாள் முழுக்க இயற்கையன்னை தூய்மையான […]

Continue Reading »

இருமலைப் போக்க எவ்வளவு காலம்?

Filed in அன்றாடம் by on February 21, 2013 0 Comments
இருமலைப் போக்க எவ்வளவு காலம்?

நாம் நுண்ணுயிர் எதிர் மருந்துக்களை (Anti Biotics) பாக்டீரியாக் கிருமிகளுக்காக உட்கொள்ளினும், பெரும்பாலான நோயாளிகள் வைரஸ் கிருமிகளினால் தொற்றுவியாதிக்கும் இதை  உட்கொள்வார்கள். இந்த மருந்து வகைகளை  உட்கொள்ளும் அரைவாசியிலும் மேற்பட்டோருக்கு இருமலும், செருமலும் வருவது நெஞ்சின் சுவாசப் பிராணப்பாதையில் வைரஸ் கிருமி ஏற்படுத்தும் தடுமன், சளி போன்ற தொற்று நோய்களினால் ஆகும். ஆயினும் இவற்றில் பத்து சதவீதமானவர்களே  பாக்டீரியாக் கிருமியின் தாக்கத்திற்கு ஆளானவர்கள். எனினும் ஏன் தான் நோயாளிகள் நுண்ணுயிர் எதிரி மாத்திரைகளை எடுத்தவாறு உள்ளனர்  என்பது […]

Continue Reading »

மரியாதைச் செலவு

Filed in இலக்கியம், கதை by on February 21, 2013 0 Comments
மரியாதைச் செலவு

சனிக் கிழமை இரவு 9 மணி… பாரி முனையிலுள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம். தோளில் மாட்டிய ஒரு லெதர் பாக் நழுவி விழாமல் நொடிக்கு நூறு முறை சரி செய்து கொண்டு, இடது கையில் தட்டைப் பிடித்துக்கொண்டு இரண்டாவதாக ஆர்டர் செய்த முட்டைத் தோசையின் வருகைக்காக கையேந்தி பவனின் முன் நின்று கொண்டிருந்தான் நம் நாயகன் கணேஷ்… சொந்த ஊரில் அவன் பெயர் கணேசன்.….. முட்டைத் தோசைக்கு ஒரு ஃப்ளாஷ் பேக்….. கணேஷ் வீட்டில் படு ஸ்ட்ரிக்ட் […]

Continue Reading »

பல்லாங்குழி

பல்லாங்குழி

மிகத் தொன்மையான தமிழர் விளையாட்டு, கிட்டத்தட்ட 8000 ஆண்டுகள் பழமையானது எனலாம். பல்லாங்குழி பற்றிய குறிப்புகள் பல தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. மொழி ஞாயிறு தேவனேயப்பாவாணர் தமிழரின் தொன்மையான, தமிழ் மண்ணின் மரபு மாறாத விளையாட்டுகளைப் பற்றி ஒரு தனி நூலே எழுதியிருக்கிறார். இந்நூலில் பாவாணர் எழுதிய முகவுரையிலிருந்து சில பகுதிகள் இதோ; . ”விளை என்றால் விருப்பு என்றும், ஆட்டு என்றால் ஆட்டம் பொருளாகும். எனவே, விரும்பியாடும் ஆட்டு, விளையாட்டு என்றானது. விரும்பப்படுதல், செயற்கெளிமை, […]

Continue Reading »

தமிழ்த்தாத்தா உ.வே.சா

தமிழ்த்தாத்தா உ.வே.சா

வடமொழி (சமஸ்கிருதம்) மேற்கத்தியரின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருந்த காலமது. தமிழில் பக்தி இலக்கியங்களும் வரலாற்றுக் காப்பியங்களும் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது என்று நம்பப் பட்டுக்கொண்டிருந்த காலத்தினூடே, தமிழின் மறக்கப்பட்ட தொன்மையை ஓலைச் சுவடிகளின்பால் ஓடி ஓடித் தேடி மிகத்தெளிவாய் உலகிற்குக் கொண்டு வந்தவர், தமிழ்த்தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் மகாமகோபாத்யாய தக்‌ஷிணாத்ய கலாநிதி  உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர்  சாமிநாதய்யர் அவர்கள். அன்றும், இன்றும் தமிழ் மொழி கோடிக் கணக்கானவர்களைச் சிறப்புற வாழ வைத்துள்ளது. ஆனால் தமிழ் என்ற மொழியை, […]

Continue Reading »

உலகத் தாய்மொழி தினம்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 21, 2013 0 Comments
உலகத் தாய்மொழி தினம்

தமிழே, உயிரே வணக்கம். ஒரு இனத்தின் அடையாளம் மொழி, இனக்குழுக்கள் தம் இனத்தவரிடையே தன் உணர்வுகளை வெளிப்படுத்தத் தனித்தன்மையான முறைகளைக் கையாண்டதன் விளைவே மொழிகளின் தோற்றம். உலகில் பல மொழிகள் தோன்றி மறைந்திருக்கின்றன, இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு, அரசாட்சி நடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி அதற்கு மொழியும் விதிவிலக்கல்ல. பேரரசுகள் காத்த மொழிகள் அனைத்தும் இன்றும் தழைத்தோங்குகிறது. கடந்த சில நூற்றாண்டுகளிலும் இதே நிலைதான். நாட்டு எல்லைகளை அதிகரிக்கவும், தன் அதிகாரங்களை […]

Continue Reading »

ஆஸ்கரில் தமிழ்ப்பாடல்

ஆஸ்கரில் தமிழ்ப்பாடல்

’லைஃப் ஆஃப் பை’ (Life of Pi) என்ற ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படத்தில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதியும் பாடியும் இருக்கின்ற “கண்ணே கண்மணியே” என்ற தமிழ்த் தாலாட்டுப் பாடல் சிறந்த திரைப்படப் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் இதுவே. இந்த வாய்ப்புக்காக இறைவனுக்கும், பெற்றோருக்கும், ஆசான்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜெயஸ்ரீ, திரைப்பாடல்கள் இயற்றிய அனுபவம் இல்லையென்றாலும், தாலாட்டுப் பாட்டுக்கு, அனுபவமோ, இசையறிவோ தேவையில்லை எனக் […]

Continue Reading »

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர்

தை/மாசி (பிப்ரவரி) மாதத்தில் நினைவு கூற வேண்டிய மற்றுமொரு மாமனிதர் “வீரமாமுனிவர்”. ”தமிழ் உரைநடையின் தந்தை” என்று போற்றப்படுபவர், இத்தாலி நாட்டில் பிறந்த இவரின் தமிழ்ப்பற்று அளப்பரியது. பெசுகி (Beschi)என்ற தம் பெயரை ‘தைரியநாதர்’ என்று மாற்றி கொண்டார். தைரியநாதர் என்பது வடமொழி என அறிந்தார். அவரின் தமிழ்ப்பற்று காரணமாக, அதுவே ‘வீர மாமுனிவர்’ எனப் பின்னாளில் மாற்றம் பெற்றது. பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழத்தொடங்கினார். 1680 ஆம் ஆண்டில் இத்தாலியில் பிறந்த இவரின் முழு இயற்பெயர் […]

Continue Reading »

உலகச் செம்மொழி – அத்தியாயம் 1

உலகச் செம்மொழி – அத்தியாயம் 1

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி என்று என் தமிழனிடம் சொன்னால், வாலறுந்த முதல் குரங்கு தமிழ் குரங்கென நீ சொல்வாயோ என எதிர்பாட்டு பாடுகின்றான். நம் மொழியின் அருமை பெருமைகளை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. நம் மக்களுக்கு புரிய வைத்தாலே போதும். இன்று நம் மக்களுக்கு ஆங்கில மொழி  மோகம் அதிகமாக இருக்கின்றது. அதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் தமிழ் பேசும் போது ஆங்கிலச் சொற்களை […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad