Archive for June, 2016
படப்பிடிப்புப் பாசறை Photo Clinic
நீங்கள் புகைப்படக்கலையில் ஆர்வமுடையவரா? Are you interested in Photography? புகைப்படக்கலை குறித்து கற்கவும், கலந்துரையாடவும் தயாராகுங்கள்… Come join us to learn and discuss together art of photo taking… விரைவில் மினசோட்டாவில் பனிப்பூக்கள் புகைப்படப் பயிற்சி முகாம் நடத்தவுள்ளது. இதில் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட, அனைவரும் கலந்துக் கொள்ளலாம். Very soon Panippookkal Photography Clinic about to take place here in Minnesota. All interested enthusiasts can […]
Kids – Story Board
கீழே உள்ள படங்களை வைத்து – உங்கள் கதையை எழுதி பனிப்பூக்களுக்கு சமர்ப்பியுங்கள் மேலே உள்ள படங்களை வைத்து – உங்கள் கதையை எழுதி பனிப்பூக்களுக்கு சமர்ப்பியுங்கள் இதோ கீழே உள்ள பீ.டீ.எஃப் தாளை நீங்கள் பதிவிறக்கி உங்கள் கதையை எழுதி மீண்டும் பெற்றோர் உதவியுடன் சமர்ப்பிக்கலாம். With your parents help you can download the PDF, write your story and then summit to us. [pdf-embedder url=”https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2016/06/kids_storyboard_June26_2016.pdf”]
ஆட்டிஸம் – பகுதி 7
(ஆட்டிஸம் – பகுதி 6) செய்த விஷயங்களையே திரும்பத் திரும்பச் செய்வதென்பது ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான ஒரு பழக்கமாகும். தங்களுக்கென்று ஒரு சூழலை, கிட்டத்தட்ட ஒரு கூடு போல வகுத்துக் கொண்டு, அதனை விட்டு வெளியில் வராமல் வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களின் வழக்கமாகும். அந்தக் கூட்டை விட்டு வெளியே வந்தால் அவர்கள் மிகவும் அமைதியிழந்து காணப்படுவர். மன அழுத்தம் அதிகரித்து, பதட்டம் மிகுந்து துயரப்படுவர். சிகிச்சை செய்யும் முறைகளும், பள்ளிகளும் அந்தக் குழந்தைகளை வழக்கமான […]
கபாலி ஃபீவர்
ரஜினி – ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் என்று ஒரு புதிய கூட்டணி உருவான போது ரசிகர்களுக்கு எழும்பிய காய்ச்சல் இது. படத்தைப் பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகும் போதெல்லாம், இன்னும் பலருக்கு பரவத் தொடங்கியது. முதல் டீசர் வெளியான நேரத்தில் ‘நெருப்புடா‘ என்று கொதித்தது, தற்போது பாடல்கள் வெளியாகிய நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமாகக் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. லிங்கா சர்ச்சைகளுக்குப் பிறகு, ரஜினி தாணுவின் தயாரிப்பில் நடிக்க முடிவெடுத்து, இயக்குனராக ரஞ்சித்தைத் […]
ரமலான்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நாம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. அவை 1.ஈமான் கொள்வது (அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. முகமது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள்) ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுவது. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது. ஸகாத் வழங்குவது. இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது. பன்னிரெண்டு முஸ்லிம் மாதங்களில் ரமலான் மாதத்திற்குப் பல சிறப்புகள் உள்ளது. இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன்முஸ்லிகளுக்குக் […]
செங்கை ஆழியான்
1941 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு சராசரிக் குடும்பத்தில் கந்தையா, அன்னபூரணி தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்து “குணராசா” என்ற பெயர் சூடப்பட்ட இவர் கல்வியிலும் இலக்கியத்திலும் பல்வேறு அரச பணிகளிலும் செய்த பல சாதனைகளைக் கணக்கிடுவது கடினம். பலருக்கு கதாசிரியராக, அரச அதிகாரியாக, நாவலாசிரியராக, இன்னும் பல வடிவங்களில் தெரிந்த குணராசா, எழுதிச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரனாதலால் தனக்குத் தானே “ செங்கை ஆழியான்” எனப் புனை பெயரைச் சூட்டிக்கொண்டு எண்ணிலடங்காத பல இலக்கியங்களைப் படைத்தார். […]
எது பெண்மை ?
ஒரு மாதிரி சமையல் வேலையை முடித்தாள் தேவி. சமையல் அறையின் மேஜையை அழுத்தி மறுமுறை அழுத்தி துடைத்து விட்டு கையை உதறி அதை குப்பையில் எறிந்தாள். “ஹ்ம்ம்” என்ற ஒரு பெருமூச்சு அவளை அறியாமல் வந்தது. இன்னும் அரை மணி நேரம் இருக்கு கிளம்ப, அப்புறம் மீது குட்டியை கூப்பிட்டுக்கிட்டு வரணும். சுவற்றில் இருந்த அந்த குட்டி மீதுவின் புகைப்படத்தைப் பார்த்தபொழுது ஒரு உற்சாகம் பொங்கியது. அந்த குட்டி வாண்டின் சேட்டைகளும்,விளையாட்டும் எப்பொழுதும் மகிழ்வு தான். இன்று […]
தீபன் – துரத்தும் துயரம்
சென்ற வருடம், கேன்ஸ் மற்றும் பிற திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளைப் பெற்ற ஃபிரெஞ்ச் திரைப்படமான “தீபன்“, மினியாபோலிஸ் அப்டவுன் தியேட்டரில் ஜுன் மாத நடு வாரத்தில் திரையிடப்பட்டது. ஃபிரான்சில் வசிக்கும் பிரபல இலங்கைத் தமிழ் எழுத்தாளரான ஷோபா ஷக்தி, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்கம் – ஃபிரெஞ்ச் இயக்குனர் அவ்தியாத். — நான் தூத்துக்குடியில் இருந்த பொழுது, சிறு வயதில் அடிக்கடி இரு சாதிகளுக்கிடையே நடைபெறும் சாதி கலவரங்களைக் காணும் பொழுது, இது […]
தமிழிசை இது நம் மக்களிசை
ஒரு சனிக்கிழமை இரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். செய்வதறியாது படுக்கையிலிருந்து வெளி நடப்புச் செய்த எனக்குக் கிடைத்த அரிய காட்சியது. மதிமங்கிய பொழுதினிலும் மூன்று குமரிகள் ஒய்யாரமாக உலவிக் கொண்டிருந்தார்கள். அரைமயக்கத்தில் இருந்த எனக்கு முன்னவளும் பின்னவளும் அன்று பெரிதாக ஈர்க்கவில்லை. ஆயினும் இடையவளின் வனப்பும் மென்மையும் என்னைச் சற்று ஈர்க்கவே செய்தது. அணைத்துக் கொள்ளும் ஆசையினால் அருகினில் சென்றேன், பெயரைக் கேட்டேன், இசை என்றாள், ஊர் தமிழகம் என்று பேசத் தொடங்கினாள். பேசிய […]