Archive for April, 2019
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா ஏப்ரல் 20ஆம் தேதி ஐசன்ஹோவர் சமூகக்கூடத்தில் நடந்தது. மதியம் 2 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா, மாலை ஆறரை மணிவரை நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது பங்களிப்புடன் பல்வேறு வகை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. பாடல், நடனம், நாடகம், இசை, பேச்சு என அனைத்துப் பிரிவுகளிலும் மாணவர்களது திறன் அங்கு வெளிப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தோரை வரவேற்று பேசிய பள்ளியின் இயக்குனர் திரு. பாலமுருகன் ராமசாமி, பள்ளியின் […]
அமெரிக்கக் குடியுரிமை பிறப்புரிமையா?
மண்ணின் மைந்தர் அடிப்படையில் குடியுரிமை சரிதானா என்ற விவாதம் இன்றும் தொடர்கிறது. பிற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வட அமெரிக்காவில் புகலிடம் கொண்டவர்களால் இந்தக் கருத்து பல திருத்தங்களுடன், புதிய கோணங்களில் விவாதிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடியுரிமைக் கணக்கெடுப்புப்படி, இந்த நாட்டில் வாழும் 40 மில்லியன் மக்கள், அதாவது மொத்த சனத்தொகையில் 13 சதவீதம் மக்கள் வெளிநாட்டில் பிறந்தவர்கள். அதே சமயம் குடியுரிமைச் சட்டங்கள் கடுமையாகக் கடைபிடிக்கப்படும் அமெரிக்க நாட்டில், சுமார் 20 மில்லியன் மக்கள் […]
நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி 2019
ஏப்ரல் 14ம் தேதி மினசோட்டா எடைனா நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடனப் போட்டிகள் நடைபெற்றன. கோயில் நிர்வாகத்தினரும், தன்னார்வல தொண்டர்களும் சேர்ந்து இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக ராஜேஷ் கோவிந்தராஜன்
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஏப்ரல் 2019)
2019 இன் தொடக்கத்தில் வந்த ஹிட் பாடல்களின் எண்ணிக்கை, பிறகு குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பொங்கலுக்குப் பிறகு ஸ்டார் நடிகர்களின் படங்கள் குறைந்துவிட்டது ஒரு காரணம் என்றால், ஹிட் ஆன படங்களில் பெரிய ஹிட் ஆன பாடல்கள் என்று எதுவும் இல்லாமல் போனது இன்னொரு காரணம். சென்ற வருட இறுதியில் வெளிவந்த மாரி-2 படத்தில் வந்த ‘ரௌடி பேபி’ பாடலின் வீடியோ யூ-ட்யூபில் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியாகி, தென்னிந்தியப் பாடல்களிலேயே அதிகப் பார்வைகளைப் பெற்ற […]
சின்மயா மிஷனின் வண்ண கொண்டாட்டம் 2019
ஏப்ரல் 20ம் தேதி மினசோட்டா சின்மயா மிஷன் சார்பில் வண்ண (ஹோலி) கொண்டாட்டம் உட்பரி நகரத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் ரிட்ஜ் உயர் நிலை பள்ளியில் நடை பெற்றது. உட்பரி நகர மேயர் திருமதி ஆன் பர்ட் (Anne Burt) குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சின்மயா மிஷன் உள்ளூர் அமைப்பின் தலைவி மற்றும் மாநிலத் தலைவர் சிறப்புரை ஆற்றினார்கள். ட்வின் சிட்டிஸில் உள்ள இந்தியர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். அரங்கில் சிறிய கடைகள் […]
மை பூச ….
அஞ்சு வருசத்துக்கு ஒரு வாட்டி கெஞ்சிக் கூத்தாடி வருவாண்டி…… கொஞ்சிப் பேசித் தலையாட்டி வஞ்சிக்க வழிபாத்து நிப்பாண்டி…… கையக் காலைப் புடிச்சுத்தான் பொய்யப் புளுகைச் சொல்வாண்டி செய்ய முடியாச் செயலெல்லாம் மெய்யா நடக்கும்னு விடுவாண்டி …… மானங் கெட்ட பொழப்பாலே போன வருசம் அடிச்ச கொள்ளை தானப் பிரபுவாத் தான் மாறி வானம் வழியாக் கொடுப்பாண்டி …. தண்ணி நீஞ்சும் மீன் புடிக்க பண்ணி வைச்ச புழுவதுடி….. கண்ணி வச்சு மான் புடிக்க பின்னிப் பிணைஞ்ச வலையதுடி […]
ஈஸ்டர் முட்டை வேட்டை 2019
ஈஸ்டர் என்பது இயேசுநாதர் மறைந்தபின் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் திருவிழா. இவ்விழாவை ஒட்டி நடைபெறும் ஈஸ்டர் முட்டை வேட்டை (Easter Egg hunt) குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நிகழ்வாகும். இந்த வருடம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள உட்பரி நகரில் ஏப்ரல் 13ம் தேதி இந்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் எடுத்த புகைப்படம் உங்களுக்காக:
பெப்பா பிக் பார்க்கலாமா?
இந்தத் தலைமுறை சிறு குழந்தைகளின் ஆதர்சமாக இருக்கும் கார்ட்டூன் கேரக்டர், பெப்பா பிக் (Peppa pig). இங்கிலாந்து தொலைக் காட்சியில் அறிமுகமான இந்தச் செல்லப் பன்றிக் குட்டி, இன்று உலகமெங்கும் ஒளி பரப்பப்பட்டு, சிறு குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் பெப்பா பிக் படம் போட்ட ஆடைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் பெருமளவு விற்பனை ஆகி வருகின்றன. பெப்பா பிக் தீம் பார்க்குகள் இங்கிலாத்திலும், சீனாவிலும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்களின் பட்டியலில் […]
தேர்தல் 2019
சுதந்திரமடைந்து எழுபத்தியிரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்தியா 17ஆவது மக்களவைக்கான தேர்தலை எதிர்கொண்டு, நடத்தி வருகிறது. ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களில் இத்தேர்தல் நடைபெறும். இருபத்தியொன்பது மாநிலங்கள், ஏழு ஒன்றியப் பகுதிகளிலிருந்து, பதினெட்டு வயதை அடைந்து விட்ட ஏறத்தாழ 90 கோடி மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர். இதில் சற்றேறக்குறைய 1.50 கோடி பேர் முதன்முறையாக வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ள இள வயதினர். தகுந்த […]