Archive for February, 2020
1917 – திரை அனுபவம்
முதல் காட்சியில் பசுமை படர்ந்து கிடக்கும் அமைதியான ஒரு நிலப்பரப்பைக் காட்டும் கேமரா, கொஞ்சம் பின்னால் நகரும் போது, இரண்டு இளம் சிப்பாய்கள் ராணுவ உடையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அங்கு வரும் ஒரு அதிகாரி, ஒருவனை எழுப்பி, “உனக்குத் துணையாக இன்னொரு ஆளைத் தேர்வு செய்துகொண்டு உயர் அதிகாரியைப் போய்ப்பார்” என ஆணையிடுகிறார். கதாநாயகன் தன் நண்பனை எழுப்பிவிட, இருவரும் உயர் அதிகாரி இருக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள், நடந்து முன்னோக்கிச் செல்லும் அவர்களை […]
எட்டாம் ஆண்டில் பனிப்பூக்கள்
இந்தாண்டின் தாய்மொழி தினத்தன்று, பனிப்பூக்கள் சஞ்சிகை எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. வட அமெரிக்காவில், கனேடிய எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு மாநிலம் மினசோட்டா. அமெரிக்க மாநிலங்களில் பரப்பளவில் 12 ஆவது, மக்கட்தொகையில் 21 ஆவது பெரிய மாநிலம். பன்முகக் கலாச்சாரம் கொண்ட மினசோட்டாவில் வாழும் 57 லட்சம் மக்களில், சுமார் 50 ஆயிரம் நபர்கள் இந்தியர்கள்; அதில் தமிழர் ஏறத்தாழ 75௦௦ பேர். பொதுவாக வாசிப்புத்தன்மை அதிகம் கொண்ட மினசோட்டா மக்களிடையே தமிழ்க் கலாச்சாரத்தைப் பகிரும் வகையில் […]
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்
உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, மினசோட்டாத் தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழி சார்ந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள், பிப்ரவரி 22ஆம் தேதியன்று ஈடன் ப்ரெய்ரியில் இருக்கும் PiM Arts High School இல் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளியில் தமிழ் பயிலும் மாணவர்கள் வெவ்வெறு தலைப்பில் காட்சிப்பொருட்கள் செய்து, அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனர். கீழடி, கல்லணை, தமிழ் மன்னர்கள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் கவிஞர்கள், தமிழ்நாட்டு மாவட்டங்கள், ஊர்கள், ஆறுகள், விளையாட்டுகள், கலைகளின் சிறப்புகள் எனப் பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். பின்னர், […]
சமூக அக்கறைக்குப் புத்தக வாசிப்பே அடித்தளமிடும்
வந்தவாசி, அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘குக்கூவென…’ ஹைக்கூ கவிதை குறுநூல் வெளியீட்டு விழாவில் மேனாள் மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் பேசும்போது, “அன்றாடம் செய்தித்தாளையும் புத்தகங்களையும் படிப்பதே ஒரு மனிதனின் சமூக அக்கறைக்கு அடித்தளமிடும் செயலாகும்” என்று குறிப்பிட்டார். வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டமும் வந்தவாசி ரோட்டரி சங்கமும் இணைந்து நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான ‘குக்கூவென…’ எனும் […]
மினசோட்டா மருத்துவர் ஆறுமுகம் – நேர்காணல்
மினசோட்டாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாகக் குழந்தைகளுக்கான இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருபவர், திரு. ராமலிங்கம் ஆறுமுகம் அவர்கள். மருத்துவர் ஐயா என்று மினசோட்டாத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவப் படிப்பை ஆரம்பித்த இவர், பின்பு லண்டனிலும், அமெரிக்காவிலும் மேற்படிப்பை முடித்து, மினசோட்டாவில் இருபதாண்டு காலமாக மருத்துவச் சேவை புரிந்து வருகிறார். 2016 இல் சிறந்த மருத்துவருக்கான விருது பெற்ற இவர், மினசோட்டாவில் […]
வாடிக்கை மறந்ததும் ஏனோ…!
சட்டுச் சட்டென்று மின்னலாய்த் திரும்பி மறைந்து விடுகிறான் அவன். என்னவொரு சுறுசுறுப்பு. அவன் சைக்கிள் போகும் வேகத்திற்கு, பின்னால் பிளாஸ்டிக் டப்பாவில் அடுக்கியிருக்கும் பால் பாக்கெட்டுகள் துள்ளிக் கீழே விழுந்து விடக் கூடாதே என்றிருந்தது இவனுக்கு. அத்தனை குதியாட்டம் டப்பாவுக்குள். அவன் பரபரக்கும் அந்தப் பகுதித் தெருக்கள் அனைத்தும் மேடும் பள்ளங்களுமாகத்தான் இருக்கின்றன. அது ஒரு தனிக் காலனி. அதிலேயே இஷ்டத்திற்கு விட்டு அடித்துக்கொண்டு போகிறான் அவன். குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த வேலையை முடிக்க வேண்டும் என்கிற […]
சர்ப்ரைஸ் கிஃட்
“ஏன்னா.. வேலண்டைன்ஸ் டே வர்ரதே, என்ன கிஃப்ட் தரப் போறேள்”, ஞாயிற்றுக் கிழமை மாலை வேறேதும் வேலையில்லையென ஹாலில் உட்கார்ந்து தொலைக்காட்சி சேனலை மாற்றிக் கொண்டிருந்த கணேஷின் அருகில் வந்தமர்ந்து கேட்டாள் லக்ஷ்மி. நாற்பதுகளில் இருப்பினும், இளமையும் காதல் உணர்வும் சற்றும் குறையாத தம்பதி. “என்னடி பெரிய வேலண்டைன்ஸ் டே, அது கிதுன்னு…” அவள் அளவு அதிகமாக வெளிப்படுத்தாத அவனின் பதில். “நேக்குத் தெரியாதா, இப்படித்தான் சொல்வேள், ஆனா எதாவது சர்ப்ரைஸ் வெச்சிருப்பேளே” என்றவளை உடனடியாக நிறுத்தி, […]
ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி – நூல் நயம்
கவிதை மொழியை அமைக்கும் ஆற்றல் பற்றி சொற்களால் விளக்குவது கடினம். அது வியக்க வைக்கும் வகையில் நம் உணர்ச்சியைத் தூண்டி, சத்தமே இல்லாமல் எம்மிடம் ஒருவகையான சலனத்தை அல்லது கிளர்ச்சியை உண்டாக்கி விடுகிறது. 2009 இல் எனது முதுகலைப் பட்டப் படிப்பு ஆய்வின் ஒரு பகுதியாக புலம்பெயர் தமிழர்களின் கவிதைகளை ஆய்வு செய்திருந்தேன். பெரும்பாலும் தாய்நாட்டிலிருந்து பல்வேறு காரணங்களுக்காகச் சொந்த நிலத்தை விட்டுப் புலத்துக்குப் பெயர்பவர்கள் தங்கள் நிலம் சார்ந்து எழுதுவதைக் காட்டிலும் புலத்தில் சந்திக்கும் அல்லது […]
மினியாபொலிஸில் ஒரு காதல் கதை
‘கூதலான மார்கழி.., நீளமான ராத்திரி..நீ வந்து ஆதரி.!!! இது மௌனமான நேரம், இள மனதில் என்ன பாரம்..’ என்ற ஜானகியின் கொஞ்சலை ரிமோட் கொண்டு நிறுத்திய பிரியா, படுக்கை அறைக்குள் நுழைந்துகொண்டே கேட்டாள். “கார்த்திக், ஹீட்டர்ல 72 வைக்கவா..? ரொம்பக் குளுருது டா.” “நோ .. 68 இருக்கட்டும். உன் குளிருக்கு நான் ஒரு வைத்தியம் சொல்றேன். இங்க வா”, என மெத்தையில் படுத்துக்கொண்டு அழைத்தான் கார்த்திக். “வேணாம்பா.. வேணாம்.. நான் போர்வையே போத்திக்குறேன்.” “ஹீட்டரையும், […]
கொடூர கொரோனா
யுஹான் ஊர்காரர்களுக்குச் சில நாட்களுக்கு முன்பு வரை இருந்த பெருமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. 11 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த ஊர், சீனாவின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்காற்றும் ஊர். சீனாவின் சிகாகோ என்று அழைக்கப்படும் ஊர் இது. உலகின் மிகப் பெரிய மின் நிலையம் கொண்ட ஊர். சீனாவின் மிகச் சிறந்த கல்வி நிலையங்கள் கொண்ட ஊர். அதனால் இவ்வூர்க்காரர்களுக்குச் சீனாவில் நல்ல மரியாதை உண்டு. இது எல்லாம் கடந்த டிசம்பர் மாதம் வரை தான். 2020 […]