Archive for January, 2024
தமிழ் மொழிப் பயன்பாடு அது வாழும் கலாச்சார கலைப்பொருள்
எமது மொழி, ஒரு சிக்கலான மற்றும் ஆற்றல்மிக்க தகவல்தொடர்பு அமைப்பாக, மனித கலாச்சாரத்தின் வளமான திரைச்சீலைக்கு, வாழும் சான்றாக செயல்படுகிறது. காலப்போக்கில் உறைந்திருக்கும் செயலற்ற அருங்காட்சியகத்தைப் (நூதனசாலை) போலன்றி, மொழி தொடர்ந்து உருவாகி, தழுவி, அதன் பேச்சாளர்களின் சமூக மாற்றங்கள் மற்றும் மதிப்புகளைப் பிரதிபலிக்கிறது. மொழியியல் அருங்காட்சியகத்தில் (நூதனசாலை) காட்சிக்குத் தள்ளப்படுவதற்குப் பதிலாக, மொழிப் பயன்பாடு என்பது ஒரு கலாச்சார, உயிருள்ள பொருளாகும் என்ற கருத்தை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. மொழியின் வாழும் இயல்பு மொழி என்பது […]
புலரும் புதிய ஆண்டு
மீண்டுமொரு ஆண்டு உருண்டோடிவிட்டது. வேகமாகப் பறந்து, கடந்து போகும் காலத்தின் நிழல் நம் மீது படர்ந்து, மனதில் பல நினைவுகளை விட்டுச் செல்கிறது. பெரும்பாலானவை மெதுவே கலைந்துவிட சில அழுத்தமாகப் பதிந்து வாழ்வின் சுவடுகளாக, அனுபவங்களாக மாறிவிடுகின்றன. கடந்த ஆண்டில் நாம் எல்லோரும் இனிப்பும், கசப்பும் கலந்த பல அனுபவங்களைப் பெற்றிருப்போம். இந்தாண்டும் பலவித சந்தோஷங்களையும், சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருப்பது இயற்கையின் நியதி. 2023 ஆம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் கணிசமாகக் குறைந்தது. இப்பெருந்தொற்றுத் […]
தகவல் சேகரிக்க அனைவருக்கும் ஏந்திர முகவர் உதவி கிடைக்கும்
எதிர்காலத்தில், ஒவ்வொரு உள்ளடக்க நுகர்வோர், உருவாக்கிகள் மற்றும் செய்தி திரட்டும் அலுவலகங்களில் வேலை செய்யும் ஏந்திர முகவர் இருக்கும். இது, நாம் தகவலைக் கண்டறிந்து தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றும். எனவே நாம் வர்த்தக நோக்கில் இதைப் பார்த்தால் அது சரி, அதை வெளியிடுவது மற்றும் பணமாக்குவது எப்படி? என்ற கேள்வி நமக்கு எழும்பலாம். முகவர் என்பவர் ஒரு நபர் அல்லது கட்சி சார்பாக செயல்படும் ஒரு மென்பொருள் நிரலாகும். எந்த முகவர் பற்றியும் தெரிந்து கொள்ள […]
இப்படியோர் தாலாட்டுப் பாடவா?
டாக்ஸி வீட்டின் முன் வந்து நின்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள் காஞ்சனா. உள்ளேயிருந்து வேகமாக வந்த குமுதவல்லி கைக்குழந்தையை வாங்கிக் கொண்டு மகளின் தலையைக் கோதியவாறு உள்ளே அழைத்துக் கொண்டு போனாள். காஞ்சனாவின் அப்பா டாக்ஸிக்கு பணம் கொடுத்து விட்டு பையை உள்ளே தூக்கிக் கொண்டு வந்த போது ‘‘இப்போதும் ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?’’ கொஞ்சம் கோபம் கலந்த தொனியோடு கேட்டார். ‘‘அவள் சோகம் அவளோடு. அவளை ஏன் வீணாகக் கடிந்து கொள்கிறீர்கள்?’’ என்றாள் குமுதவல்லி […]
இனி ஒரு விதி செய்வோம்
இங்கே விதிகள் பலவகை உண்டே இவைகளை உடைத்திட இங்கேயே யாருண்டு? தேவதூதனைத் தேடுகிறோம் அவதாரங்களுக்காக அங்கலாய்கிறோம் மனிதம் இங்கே தலை தூக்கிட மானிட சமுதாயம் மாறிடவே வழிவகுப்போம் சமுதாய நீதியைச் சமைத்திட சாதித்திடுவோம் ஆண் பெண் இரண்டே சாதி எல்லாமும் எல்லோருக்குமே கிடைப்பதே சமூகநீதி அன்பின் உலகம் ஆர்வமாய் படைத்திட்டே அகிலம் சிறக்க பாடு படுவோம் உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயம் சமைத்திடவே […]