\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

நானே சிந்திச்சேன் – திரைப்படக் குறியீடுகள்

நானே சிந்திச்சேன் – திரைப்படக் குறியீடுகள்

நேற்று நானும், ஜனாவும் வரதுவைப் பார்க்கப் போயிருந்தோம். அவன் வீட்டருகிலிருக்கும் ‘ஸ்வீட் வாட்டர் டிரெய்லில்’, ‘டிரக்கிங்’ கிளம்பினோம். கொஞ்ச தூரம் நடந்ததும் ஜனா பேச்சைத் துவங்கினான். ‘என்ன மச்சி.. உங்காளு படத்துக்குப் பூஜை போட்டாங்க போலிருக்கு?’ என்றான் என்னைப் பார்த்து. ‘எந்தப் படத்தடா சொல்ற?’, அறிந்தும் அறியாமல் கேட்டேன் நான். ‘உங்காளுன்னு அவன் என்ன ஆலியா பட்டையா சொல்லப்போறான்.. ஆண்டவரத்தான்..’, வரது பல்ஸைப் பிடித்துவிட்டான். ‘ஓ.. ‘தக் லைஃபை’ சொல்றியா. அப்டியே ‘தக்’ லுக்கு இல்ல?..’ ‘என்ன […]

Continue Reading »

நிரந்தரப் போர் நிறுத்தம் சாத்தியமா?

Filed in தலையங்கம் by on November 28, 2023 0 Comments
நிரந்தரப் போர் நிறுத்தம் சாத்தியமா?

காஸா பகுதியில், ஏறத்தாழ 14,000 நபர்கள் உயிரிழந்த நிலையில், கத்தார், எகிப்து, அமெரிக்கா  உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்திற்கு முனைந்து வருகின்றன. போர் நிறுத்தத்திற்கு உடன்பட இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர், இருதரப்பும் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதம், காஸாவைக் கட்டுப்படுத்தும் பயங்கரவாத ஹமாஸ் அமைப்பு,  இஸ்ரேலின் முக்கியமான பகுதிகளில் மிகக் கொடுரமான அதிரடித் தாக்குதலை நிகழ்த்தியது. வான், கடல், மற்றும் தரை வழியாக இஸ்ரேல் நாட்டிற்குள் ஊடுருவிய ராக்கெட்டுகள் மற்றும் […]

Continue Reading »

இயற்கையின் அமைதியான அழகைத் தழுவுதல்

இயற்கையின் அமைதியான அழகைத் தழுவுதல்

மாறிவரும் பருவங்கள் முழுவதும் அதன் அழகை வெளிப்படுத்த இயற்கை ஒரு நேர்த்தியான வழியைக் கொண்டுள்ளது.  ஆறுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நன்னீர் ஏரிகளில், இயற்கை உலகிற்கு ஒரு தனித்துவமான, எழில் மிகுந்த அழகியலைச் சேர்க்கும் வண்ண இலைகளின் மயக்கும் மாற்றத்தை எவரும் காணலாம்.  இந்த நிகழ்வு புலன்களைக் கவர்வது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுடன் ஆழமான தொடர்பைத் தூண்டுகிறது.  இந்த நீர் நிலப்பரப்புகளில் மாறிவரும் இலைகளின் நிறங்கள் எவ்வாறு நம் வாழ்க்கையை வளப்படுத்துகின்றன என்பதை ஆராய்வோம்; மற்றும் இயற்கைக்கும் நமது இருப்புக்கும் […]

Continue Reading »

தமிழ்க் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் அமெரிக்காவில் நன்றி நவிலல்

தமிழ்க் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் அமெரிக்காவில் நன்றி நவிலல்

‘நன்றி நவிலல்’ (Thanks giving) என்பது அமெரிக்கர்கள் ஒன்று கூடி தங்கள் வாழ்வில் கிடைத்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரம். நாம், தமிழ்க் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் இந்த நேசத்துக்குரிய விடுமுறையைச் சற்றே மாற்றியமைப்பதன் மூலம், நமது மரபுகள், சடங்குகள் மற்றும் மதிப்புகளுடன் இக்கொண்டாட்டத்தை வளப்படுத்தலாம். தமிழர் பண்பாட்டைப் பொறுத்தவரையில், கோலக் கலை, கர்நாடக இசை மற்றும் பல கலாச்சார விருந்துகள் போன்ற கூறுகளை இணைப்பது,  எந்தவொரு விழாவின் ஆழத்தையும் பன்முகத்தன்மையையும் அதிகரிக்கும். இவை பலரும் ஒருங்கிணையும் சகிப்புத்தன்மையை […]

Continue Reading »

நானே சிந்திச்சேன் – கல்வியா? கைத்தொழிலா?

Filed in கதை, வார வெளியீடு by on October 30, 2023 0 Comments
நானே சிந்திச்சேன் – கல்வியா? கைத்தொழிலா?

நானே சிந்திச்சேன் – கல்வியா? கைத்தொழிலா? “என்னதான் சொல்லு.. ‘டன்கின்ஸ்’ காஃபியை அடிச்சுக்க முடியாது மச்சி” – காபி கப்பை மேஜையில் வைத்துவிட்டு, ‘கிளேஸ்ட் டோனட்’ ஒன்றைப் பக்குவமாகப் பிடித்தபடி, பேச்சைத் தொடங்கினான் ஜனா. “ஆமாமா.. அதுக்குத்தானே ‘அமெரிக்கா ரன்ஸ் ஆன் ‘டன்கின்ஸ்’ன்னு சொல்றாங்க..” “எவன் அப்டி சொன்னது.. ‘டன்கின்ஸ்’ ரன்ஸ் ஆன் யூ.. நம்ப குஜ்ஜு ஆளுங்கதான் இந்த காஃபி சாம்ராஜ்யத்தையே கட்டி ஆளறாங்க.. குஜராத்துன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பாத்தியா? செம […]

Continue Reading »

யாரவள்?

Filed in கதை, வார வெளியீடு by on October 30, 2023 0 Comments
யாரவள்?

தீ ஜுவாலை போல் அதிகாலை சூரிய வெளிச்சம் தொலைவிலிருந்த நீர்த்தேக்கத்தில் பட்டு அந்தப் பகுதியையே ஜொலிக்கச் செய்துகொண்டிருந்தது. மஞ்சளையும், குங்குமச் சிவப்பையும் கலந்து, குழைத்தெடுத்துத் திட்டுத் திட்டாய்ப் பூசியது போன்ற வர்ண ஜாலம். குளப் பகுதியின் அருகில், சிறிய நாரைக் குடும்பம் ஒன்று, சுறுசுறுப்புடன் இரை தேடி இங்குமங்குமாய் நடந்துகொண்டிருந்தது. அதிலும் அந்த குட்டி நாரைக்கு அதிகப் பசி போல. பெரிய நாரைகளுக்கு முன்னால் நடந்தவாறு, அலகினால் நிலத்தில் குத்திக் குத்தி பசியாற்றிக் கொண்டது. பின்புல சூரிய […]

Continue Reading »

நானே சிந்திச்சேன்..

Filed in கதை, வார வெளியீடு by on October 3, 2023 0 Comments
நானே சிந்திச்சேன்..

போன வாரத்துல ஒரு நாள் சாயங்காலம்.. வேலையெல்லாம் முடிச்சுட்டு, கொஞ்ச நேரம் விஸ்ராந்தியா உட்காரலாம்னு நெனச்ச நேரத்துல கரெக்டா, ஜனா ஃபோன் பண்ணினான்.. “ஏ மச்சி .. இந்த வீக் எண்ட் என்ன பண்ணப் போற?” ன்னு கேட்டான்.. இவன் எதுக்கோ தூண்டில் போடப்போறான்னு நெனச்சி “இந்த வாரமா? என் வொய்ஃப் ரொம்ப நாளா சொல்லிகிட்டே இருந்தா.. இந்தத் தோட்டத்துக்குச் செடியெல்லாம் வாங்கணும்.. ‘டாம்பா’ல ஒரு பெரிய ஆர்பரிட்டம் இருக்காம்.. போயிட்டு வந்துடலாம்னு.. அதான் ‘டாம்பா’ போலாம்னு […]

Continue Reading »

இளமையில் கொல்..

Filed in கதை, வார வெளியீடு by on October 3, 2023 0 Comments
இளமையில் கொல்..

  ‘வாரன் லைப்ரரி’யைக் கடந்து இரண்டு மூன்று நிமிடங்களிலேயே ‘எலிசபெத் எஸ்டேட்ஸ்’க்கான என்ட்ரன்ஸ் வந்துவிட்டது. ‘பாம் பீச்’ பகுதி, ஃப்ளாரிடாவிலேயே மிக மிக வசதி படைத்தவர்கள் வசிக்கக் கூடிய பகுதி என்று தெரிந்திருந்தாலும், ‘எலிசபெத் எஸ்டேட்ஸின்’ கூடுதலான ஆடம்பரப் பகட்டு, மேசனுக்குப் பிரமிப்பு தந்தது.  குறைந்தது மூன்று ஏக்கரில் கட்டப்பட்டிருந்த ஒவ்வொரு பங்களாவும், மற்றதை விட பிரம்மாண்டமாக இருப்பது போல் தோன்றியது. ஒவ்வொன்றும் எப்படியும் குறைந்தபட்சம் 20 மில்லியன் போகுமென மேசனின் மூளை கணக்கிட்டது. இரு புறங்களிலும் […]

Continue Reading »

இலையுதிர்காலத்தின் வசீகரிக்கும் அழகைத் தழுவுதல்

இலையுதிர்காலத்தின் வசீகரிக்கும் அழகைத் தழுவுதல்

வட அமெரிக்காவில் வண்ணங்கள் மற்றும் விறுவிறுப்பான காற்றின் இயைவான இன்பரசம் பெரும்பாலும் இயற்கையின் மகத்தான கோடைப் பருவத்தின் முடிவாகக் கருதப்படும் இலையுதிர்காலம், வண்ணங்களின் மயக்கும் காட்சி மற்றும் மிருதுவான, புத்துணர்ச்சியூட்டும் காற்றுடன் வட அமெரிக்கா முழுவதும் பரவுகிறது. இலைகள் சிவப்பு, செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிறங்களின் துடிப்பான படலமாக மாறும்போது, கண்டம் ஒரு பிரமிப்பூட்டும் தலைசிறந்த படைப்புக்கான ஓவிய வரை திரையாக (Drawing Canvas) மாறுகிறது. இத்தருணத்தில் நாம் வட அமெரிக்காவில், குறிப்பாக மினசோட்டா மாநிலத்தில் அழகான […]

Continue Reading »

இடி, மின்னல், மழை மங்கை!

இடி, மின்னல், மழை மங்கை!

நெற்றிப் பரப்பினில் சுற்றிப் பறந்திடும் கற்றைக் கூந்தலைச் சற்றே விலக்கிச் சிரித்தாள்!!   விலக்கலில் வழிந்த வியர்வையும் மெதுவாய் விழிகளைத் தாண்டி விழுவதில் விழுந்தேன்!!   நாசிகளைக் கடக்கையில் சுவாசித்துத் தணிந்ததால் வீசிய கனலது தூசியாய் மேகமாகியது!   மங்கையின் வியர்வையும் பொங்கிய கனலினால் தங்கியே வான்புக கங்கையாய்ப் பொழியுதோ?   கண்ணதன் ஒளியுமே மண்ணிதின் மீதிலே எண்ணத்தின் வேகமாய் மின்னலாய்ப் பாய்ந்ததோ?   கன்னியவள் குலுங்கிடக் கடலலையும் குதித்திடுமோ? என்னவளும் சிணுங்கிட இடியதுவும் சினந்திடுமோ?   […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad