admin
admin's Latest Posts
சாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’

‘சாஹித்ய’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு இலக்கியம் என்பது பொருள். இந்திய மொழி இலக்கியங்களை மேம்படுத்தும் நோக்கில் 1952 இல் உருவான சாஹித்ய அகாடெமி எனும் தன்னாட்சி அமைப்பு பிற மொழி இலக்கியங்களை இந்திய மொழிகளில் மாற்றம் செய்வது, எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி அவர்களது படைப்புகளை ஆவணப்படுத்துவது, இலக்கிய கூட்டங்கள் நடத்துவது என பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. அது மட்டுமின்றி, எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் பலவித விருதுகளை அளித்து வருகிறது. இந்திய அரசு அங்கீகரித்துள்ள 24 […]
கிறிஸ்துமஸ் பெருவிழா

எங்கும் சில்லென்ற குளிர், பனி படர்ந்த புல்வெளி. நீண்ட விடுமுறைக்காகவும், அன்பைப் பகிர்ந்துகொள்ளும் சாண்டா கிளாஸின் பரிசுக்காக ஆவலோடு காத்திருக்கும் குழந்தைகள்…!!! இவ்வாறு உலக மக்கள் அனைவரும் மகிழ்வோடு எதிர்பார்த்திருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். டிசம்பர் 25 ம் தேதி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆண்டு விழா ஆகும், இயேசு கிறிஸ்து மனிதகுலத்தை, பாவ நிலையிலிருந்து மீட்க மனித உருவத்தில் உலகத்திற்கு வந்தார். இவ்வுலகத்தில் ஒரு மனிதன் தனது வாழ்வை தொடங்கும் முதல் நாள்தான் அவர்களுடைய பிறந்த […]
வாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி?

வாழ்வில் குறித்த கருமத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய பக்குவமான சிந்தனை அவசியம். இதில் முதல் கட்டம் நாம் தகுந்த குறிக்கோள்களைப் பகுத்து, ஆய்ந்து எடுத்துக் கொள்கிறோமா என்று அறிந்து கொள்வது தான். அதாவது நாம் ஒரு கருமத்தைத் தெரிவு செய்யும் போது, இந்த விடயம் எமக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர்வது முக்கியம். வெளியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ளினும், எமது மனதில் ஆழமான முக்கிய மதிப்பீடுகள் எமது அன்றாட வாழ்வில் எம்மை ஆட்கொள்கின்றன. இதை உணர்ந்து […]
திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

தமிழ்த் திரைப்படங்கள் இதிகாசம், புராணம் என்பதைக் கடந்து சமகாலத்துக் கதைகள் என்ற தளத்துக்கு வந்தபோது, பெரும்பாலும் உணர்வுகள் மேலோங்கி நிற்கும் படங்களே வெற்றி பெற்றன. சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் சூழலைச் சில படங்கள் தோலுரித்தன. கூட்டுக் குடும்பங்களில் நிலவும் முரண்பட்ட மனங்களால் வாழ்க்கை சூறாவளியானதைச் சுட்டிக்காட்டின. அந்தச் சமயத்தில் யுவ-யுவதிகளைச் சுண்டி இழுக்கும் சக்தியாய், மென்மையான காதல் படங்களைத் தந்தவர் C.V. ஸ்ரீதர். ‘செங்கோல் அவனுக்கு, சர்வாதிகாரம் எனக்கு’ என்று உத்தமபுத்திரனில் சரித்திர வசனம் எழுதிய ஸ்ரீதர், […]
அழகிய ஐரோப்பா – 10

(அழகிய ஐரோப்பா – 6/திருவிழா) அழகிய ஐரோப்பா – ஃபெரி தக்காளி சாதம் சாப்பிட்டு பசிக்களை போனதும் அடுத்த பயணத்துக்கான அடுக்குகளுடன் எல்லோரும் வேனில் ஏறி டோவர் நோக்கி விரைந்தோம். டோவரை நெருங்க நெருங்க வீதியின் இரு புறமும் இராட்சத கோட்டைகளும் அரண்களும் என வீதியின் இருபுறமும் வரிசைக் கட்டி நின்றன. இரண்டாம் உலக யுத்த காலத்தில் அயல் நாடுகளைக் கண்காணிக்க உயர்ந்த மலை உச்சிகளில் அமைக்கப்பட்ட அரண்களெல்லாம் இன்றும் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது. […]
ஐராவதம் மகாதேவன்

கல்வெட்டியியல், தொல்லியல், பத்திரிக்கையாசிரியர், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகத்தன்மை பெற்றிருந்த பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் கடந்த நவம்பர் மாதம், 26ஆம் நாள் மூப்பு காரணமாக காலமானார். தமிழின் தொன்மை, எழுத்தியல் வளர்ச்சி குறித்து சிந்திக்கும் எவராலும் தவிர்க்க முடியாத பெயர் ஐராவதம் மகாதேவன். தனது விஞ்ஞானப்பூர்வ ஆய்வுகள் மூலம் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும், திராவிட மொழிக் குடும்பத்துக்குமுள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி சிந்து சமவெளி கலாச்சாரம் திராவிடக் கலாச்சாரமே என்று நிறுவி தமிழ் […]
நன்றி நவிலல் நாள் – பிரதிக்ஷனா 5 கி.மீ, ஓட்டம் 2018

மினசோட்டா மாநிலத்தின் மேபிள் குரோவ் நகரத்தில் உள்ள இந்து கோவில் சார்பில், நன்றி நவிலல் நாளான நவம்பர் 22ம் தேதியன்று, 7வது ஆண்டாக, பிரதிக்ஷனா ஐந்து கிலோமீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வைக் கோயில் நிர்வாகத்தினர், தன்னார்வலர்கள் பலர் துணையுடன் சேர்ந்து நடத்தினர். சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 50 பேர் இந்தப் பந்தயத்தில் பங்கேற்றனர். முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்குப் பரிசும், பங்கேற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில […]
ஆச்சர்யக்குறிகள்

கேள்விக்குறிகளான மெய்யை ஆச்சர்யக் குறிகளாக்கும் மாற்றுத்திறனாளிகளே! திறமைகளின் குவியலே! தன்னம்பிக்கையின் உருவமே! விழிகள் செயலிழந்தவர்களே! உங்கள் வாழ்க்கை விழி திறந்து படிக்கப்பட வேண்டிய பாடம்! கைகள் இழந்தவர்களே! தன்னம்பிக்கை தந்திடும் உங்களின் போராட்ட வாழ்க்கை! செவித்திறன் இழந்தவர்களே! உலகம் கேட்டுக்கொண்டே இருக்கட்டும் தொடர் வெற்றிகளை! மனவளர்ச்சி இல்லாதவராம் நீங்கள்! உங்கள் உதட்டினில் தானே தவழ்கிறது தூய புன்னகை! உலகின் கோணப்பார்வைக்குத் தானே குறை பிறை! நிலவுக்கு ஏது? திரும்பியிருக்கும் அரை உலகிற்கே இருட்டு! விழிகள் மூடுவதில்லை என்றும் […]
2.0

நடப்பதைக் காணும் போது ரஜினியின் மவுசு குறைந்து விட்டது போல் தான் தெரிகிறது. சூப்பர் ஹிட் படமான எந்திரனின் தொடர்ச்சி, பெரும் பொருட்செலவு, VFX என பரபரப்பைக் கிளப்ப ஏகப்பட்ட சங்கதிகள் 2.0 க்கு இருந்தாலும், படத்தின் ரிலீஸ் அந்தளவுக்கு எதிர்பார்ப்பைக் கிளப்பவில்லை. அதாவது ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய் குமார் என இத்தனை பெரும் தலைகள் இருக்கும் போது, அதற்கேற்ற பெரிய ஓப்பனிங் இல்லை. படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொண்டு படம் பார்க்கலாம் என்பது […]