\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

விடியாத இரவென்று எதுவுமில்லை

Filed in கதை, வார வெளியீடு by on October 14, 2018 0 Comments
விடியாத இரவென்று எதுவுமில்லை

  செப்டம்பர் மாத மாலை நேர வெயில் அந்த இடத்தைச் செம்மஞ்சளில் முக்கி எடுத்தது போல் மாற்றியிருந்தது. மினசோட்டாப் பனியை நன்கறிந்த வாத்துகள் கூட்டமாகப் பறக்கப் பழகிக் கொண்டிருந்தன. எட்டுக்குப் பனிரெண்டு அளவிலிருந்த அபார்ட்மென்ட் பால்கனியில் அமர்ந்திருந்தனர் சத்யனும்  நர்மதாவும். தூரத்தில் ராச்சஸ்டர் கேஸ்கேட் ஏரியில் ஒற்றையாக அலைந்து கொண்டிருந்த படகை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் நர்மதா. அவள் கையிலிருந்த காஃபி இந்நேரம் ஆறிப் போயிருக்கும். லேசான குளிருக்குப் பயந்து பால்கனியின் பக்கவாட்டு சுவர் மறைப்பில் அவள் உட்கார்ந்திருந்தாலும், […]

Continue Reading »

இதுவும் கடந்து போம்

Filed in கவிதை, வார வெளியீடு by on October 14, 2018 1 Comment
இதுவும் கடந்து போம்

மனதிற்கு இனிய மழலையாய் வந்துதித்தேன்.. மழலையும் மெதுவாய்க் கடந்தே போனது…… கொள்ளை அழகுக் குழந்தையாய்த் தவழ்ந்திருந்தேன் கொடுத்ததை எடுத்ததுபோல் கடந்தே போனது…. படிப்பதில் பிடிப்பால் பள்ளிக்குச் சென்றிருந்தேன்.. பள்ளிப் பருவமதுவும் கடந்தே போனது.. கட்டிளங் காளையாய்க் கல்லூரியை வலம்வந்தேன்.. கல்லூரி நாட்களும் கடந்தே போனது… காளைப் பருவத்தில் காதலிக்காகத் தவமிருந்தேன் காதலும் மறைந்து கடந்தே போனது.. துயரத்தின் மத்தியில் தொழில்பல புரிந்திருந்தேன் துயரமும் கூட கடந்தே போனது…. மனையாளின் சுகமதை மலரென நுகர்ந்திருந்தேன் மனத்தாங்கலால் சுகமது கடந்தே […]

Continue Reading »

நவராத்திரி  திருவிழா 2018

நவராத்திரி  திருவிழா 2018

முப்பெருந்தேவியரான லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஆகிய மூவரையும் போற்றும் விதமாகக் கொண்டாடப்படுவது நவராத்திரி. நவம் என்ற சொல்லுக்கு வட மொழியில்  ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இந்தியாவின் பல பகுதிகளில் பலவிதமாகக் கொண்டாடுகிறார்கள். குஜராத் மாநிலத்தில் இவ்விழா நடனத் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. ஓவ்வொரு இரவும் மக்கள் ஒன்று கூடி நடனமாடுவார்கள். இந்த வகையான நடனத்தை கார்பா (garba) அல்லது தாண்டிய (dandiya) என்று அழைப்பார்கள். இந்த ஆண்டு மினசோட்டா மாநிலத்தில் உள்ள குஜராத் […]

Continue Reading »

வரைவது எப்படி?

வரைவது எப்படி?

Continue Reading »

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 10 சாங்ஸ் (அக்டோபர் 2018)

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 10 சாங்ஸ் (அக்டோபர் 2018)

இவ்வருடத்தின் முந்தைய பகுதிகள். காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2018) காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018) காற்றில் உலவும் கீதங்கள் மூலம் உங்களைச் சந்தித்து வருவதில் சின்ன  இடைவெளி விழுந்துவிட்டதால், அதை ஈடுகட்டும் விதமாக, நமது இந்த லிஸ்ட்டில் பத்துப் பாடல்கள். கோலி சோடா 2 – பொண்டாட்டி கோலி சோடாவின் இரண்டாம் பாகம் முதல் பாகம் ஓடிய அளவுக்கு ஓடவில்லை. படத்தில் சமுத்திரக்கனி, […]

Continue Reading »

திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள் – 2

திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள் – 2

பாகம் 1 சென்ற மாதக் கட்டுரையில் கண்ணதாசனின் வியத்தகு பாடல்களில் ஒன்றான ‘பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா’ என்று ஐய வினாக்களால் தொடுக்கப்பட்ட பாடலைப் பார்த்தோம். ஐய வினாக்கள் (சந்தேகக் கேள்விகள்) பொதுவாக ‘ஆ’ என்ற விகுதியுடன் முடிவடையும். இது மலரா, அது மலையா போன்ற கேள்விகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த வகைக் கேள்விகளின் நீட்சியாக ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய இரண்டு பொருட்களைக் குறிப்பிட்டு இதுவா, அதுவா என்று கேட்பதுமுண்டு. ‘பழம் இனிக்கிறதா, கசக்கிறதா?’, […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 2

அழகிய ஐரோப்பா – 2

முதல் பாகம் அவளும் நானும் மத்தியானச் சாப்பாடு பதினோரு மணிக்கே முடிந்தாகி விட்டதனால் பயண முன்னேற்பாடாக என் துணைவி, பாத்திரங்களைக் கழுவி வைப்பதிலும் மற்றும் சில பல துப்புரவு வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள்.   ஒரு மாத காலப் பயணம் என்பதனால் தண்ணீர் லீக் ஆகி “பேஸ்ட்மென்ட்” பழுதாகி விடுமோ என்ற பயம் எனக்கு…  அதனால் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்னதாக முழு வீட்டுக்குமான வாட்டர் சப்ளையை “சட் ஆஃப் ” செய்துவிடும் முனைப்பில் இறங்கியிருந்தேன். “நேரம் […]

Continue Reading »

செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

எத்தனை தோல்விகள் கொடுத்தாலும், மணிரத்னம் என்ற கலைஞனுக்கு இருக்கும் மவுஸ் குறையாது என்று மீண்டும் நிருபித்து இருக்கிறது – செக்கச் சிவந்த வானம். விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளம் அவருடன் இப்படத்தில். எதிர்பார்ப்புக்குச் சொல்லவா வேண்டும்? எதிர்பார்த்ததைப் போலவே படத்திற்கு மாஸ் ஓப்பனிங். எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறாரா மணிரத்னம் என்பதைப் பார்ப்போம். கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை என மணிரத்னத்தின் […]

Continue Reading »

சூதாட்டம்

Filed in கவிதை, வார வெளியீடு by on September 30, 2018 0 Comments
சூதாட்டம்

காசாசைச்  சூதாட்டம் காலத்தை வீணாக்கும் நாசமாக்கும் வாழ்வை நாளும்    சிதைக்கும் பேராசை என்றுமே பேரழிவைத்  தரும் ஏசப்படாமல் வாழ்வதே ஏற்றத்தைத்  தரும்   நாசம் விளைவிக்கும் நஞ்சுச்  செயல்களை வீசி எறிந்துவிடு விவேகத்தோடு வாழ்ந்திடு அசலாகி  வாழ்தலே ஆக்கம்  அளிக்கும் நிசமான  உழைப்பே நன்மை  செய்யும்   அறிவாய் இருத்தல் அனைவருக்கு மழகே   – சரஸ்வதி ராசேந்திரன்

Continue Reading »

வானத்தின் நாணம்

Filed in கவிதை, வார வெளியீடு by on September 30, 2018 0 Comments
வானத்தின் நாணம்

கன்னியவள் வழுவழுத்த கன்னங்களில் காதலன் தன் முத்தங்களின் இதழ் பதிக்க நாளங்களில் குருதி பொங்கி பாய்ந்தோடி நாணத்தினால் மதிவதனம் சிவந்தது போல், அந்தி மயங்கும் நேரத்திலே ஆதவனின் பொற்கரங்கள் அன்பு கொண்டு தழுவியதால் அந்தி வானம் சிவந்ததுவோ!.   சித்தினியின் சித்தமது சிறகடிக்க வஞ்சியவள் நெஞ்சமது துடிதுடிக்க காரிகையின் கண்ணிரண்டும் படபடக்க கைகளினால் முகம் மறைத்த காதலி போல், கடல் அன்னை அலை எழுப்பிப் பரிகசிக்க வான் பறவை கானம் பாடி வாழ்த்துக் கூற வான் மகளும் நாணத்தினால் முகம் சிவக்க […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad