\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

உட்பெரி நாட்கள் திருவிழா 2018

உட்பெரி நாட்கள் திருவிழா 2018

வட அமெரிக்காவில் கோடை காலம் முடியப் போகும் காலம்;   பள்ளி மற்றும் கல்லூரி ஆரம்பிக்கும் முன்பு அனைத்துப் பெருநகரங்களும் அவற்றைச் சுற்றியுள்ள  சிறு நகரங்களிலும் விழா எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு காட்சிகள் நடத்துவதில், அமெரிக்காவில்  டெக்சாஸ் மாநிலம் முதல் இடத்திலும் மினசோட்டா மாநிலம் இரண்டாம் இடத்திலும் உள்ளனவாம். மினசோட்டா மாநிலத்தில் உட்பெரி  என்ற நகரத்தில் நடைபெற்ற ”உட்பெரி டேய்ஸ் ()” மிகவும் சிறப்பான ஒன்றாகும். இந்த நகரம் உருவாகி 50 வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் விதமாக […]

Continue Reading »

சாமி ஸ்கொயர்

சாமி ஸ்கொயர்

தமிழின் தலை சிறந்த இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் போன்றோர் கூட ஆங்கிலப் படங்கள் பார்த்து இன்ஸ்பையர் ஆவதுண்டு. உள்ளூர் சரக்கோடு மட்டுமே படம் எடுத்து கமர்ஷியல் ஹிட் கொடுத்துக் கொண்டிருப்பவர் இயக்குனர் ஹரி. அவ்வப்போது, கூடவே கொஞ்சம் தலைவலியும் கொடுப்பார். 2003 இல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன சாமி படத்தின் இரண்டாம் பாகத்துடன்  இப்போது களம் இறங்கியிருக்கிறார். சிங்கத்தின் மூன்று பாகங்களை இயக்கியவருக்கு சாமியின் அடுத்த பாகத்தை எடுக்க ஆசை வராதா? நமக்கும் தான். விக்ரமின் […]

Continue Reading »

2018 இலையுதிர் கால மினசோட்டா மாநில நிகழ்வுகள்

2018 இலையுதிர் கால மினசோட்டா மாநில நிகழ்வுகள்

என்ன? எங்கே? எப்பொழுது? Septobest Wabasha September 7 – October 27 Parade of Homes & Remodeling Showcase Twin Cities September 8 – 30 Grape Stomp Carlos Creek Winery, Alexandria September 14 – 16 New Ulm’s Oktoberfest New Ulm Oct 5th & 6th Oct 12th & 13th Medtronics Twin Cities Marathon St. Paul and Minneapolis October 7 […]

Continue Reading »

உண்மையான அன்பின் வல்லமை

உண்மையான அன்பின் வல்லமை

இந்த உலகம் அன்பால்  இணைக்கப்பட்டது. அதில் உள்ள அனைத்து  உயிர்களும் அன்புக்காக ஏங்குகின்றன.  அன்பின் அடிப்படையில் உருவாகுவதுதான் திருமணம். அந்த திருமணம் வெற்றிபெற முதன்மையான காரணம் கடவுளின் அன்பும், மற்றும் கணவன் மனைவியிடையே உள்ள அன்பு  கலந்த உறவும்தான். எந்த ஒரு நபரும் கடவுளின் விருப்பப்படி நடப்பதன் மூலமாகவே கடவுளின் அன்பைப் பெறுகிறார்.   அதேபோல குடும்பத்தில் தம்பதியர்கள் கடவுளை முழுமனதோடு நேசிக்கும்போது, ​​அவர்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்படுவார்கள். அவர்களின் திருமணபந்தத்தில், அவர்கள் கடவுளின் மேல் கொண்டுள்ள அன்பினாலும், பக்தியினாலும் […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 1

அழகிய ஐரோப்பா – 1

உல்லாச உலா அமெரிக்காவில் பனியும் பணியுமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. பூட்டிய அறைகளிலேயே பிள்ளைகள் நாளாந்த வாழ்க்கையைக் கடந்து போகிறார்கள். பிள்ளைகளின் மகிழ்வுக்காகச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வெளியூர் பயணம் மேற்கொள்வது என்பதை ஒரு நோக்கமாக வைத்துள்ளோம். நான்கு வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றிருந்தோம். அமெரிக்கா வந்தபின் சென்ற முதல் வெளிநாட்டு பயணம் அது என்பதால் மறக்கமுடியாத நினைவாக இன்றும் இருக்கிறது. இரண்டு வருடம் முன்பு துபாய் மற்றும் இலங்கை சென்றிருந்தோம். இவ்வருடம் ஐரோப்பா போவதென முடிவெடுத்திருந்தோம். […]

Continue Reading »

சிங்கப்பூரின் சிறு இந்தியா

சிங்கப்பூரின் சிறு இந்தியா

வர்த்தகக் வேலை காரணமாக பல்லாண்டுகள் கழித்து  சிங்கப்பூர் போயிருந்தேன். எனது வேலைகள் முடிந்த பிறகு சிங்கப்பூர் வாழ் நண்பன் கோபிக்குத் தகவல் அனுப்பியிருந்தேன். அவனும் மகிழ்வுடன் ஒரு மணித்தியாலத்தில் நான் இருந்த ஹோட்டலுக்கு வந்தான். என் நண்பன் கோபிக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். வேலைப் பயணங்களின் போது வேளா வேளைக்கு ஹோட்டலில் எதையாவது சாப்பிட்டுக் கொள்ளும் எனக்குத் தமிழ்ச் சமையல் தரமாகப் பிடிக்குமென்று அறிவான். எனவே நண்பன் கோபி, நாம் சிறு இந்தியாவைப் பார்க்க பாரம்பரிய […]

Continue Reading »

ரொறோன்ரோ தமிழர்த் தெரு விழா

ரொறோன்ரோ தமிழர்த் தெரு விழா

வருடா வருடத் தமிழர் கோடைவிழாவாகிய தெரு விழா மீண்டும் கோலாகலமாக ஆகஸ்ட் 25-26 தேதிகளில் ரொறோன்ரோ நகரின் ஸ்காபரோ பகுதியில் மார்க்கம் வீதியில் நடைபெற்றது. குறிப்பாக மக் நிக்கல் அவனியூ விற்கும் பாஸ்மோர் அவனியூவிற்கும் இடையே நடைபெற்றது. பண்டைய யாழ்ப்பாண ஆஸ்டின் மார்டின் கார்களும், ஆகா, ஓகோ என்று சுவைக்க ஐஸ்கிரீம் பழங்களும், சுடச்சுடக் கூழும் கிடைக்கப் பெற்றன. யாழ்ப்பாண மண்வாசனை மறவாதவருக்கு பனம் பண்டங்கள் பலவும், பசியாறப் பலவகைப் பணியாரங்களும், அப்பம்,தோசை கொத்து உரொட்டிகளும் கிடைக்கப்பெற்றன. […]

Continue Reading »

திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்

திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்

சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்த் திரையுலகில் காலத்தால் அழியாத காவியப் பாடல்களைத் தந்த கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரது பிறந்த தினத்தையொட்டி பனிப்பூக்கள் இதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் படித்து, ரசித்த சில நண்பர்கள் கண்ணதாசன், விஸ்வநாதன்–ராமமூர்த்தி கூட்டணியில் வந்த, சுவாரசியமான  பாடல்களைப் பற்றி எழுதுமாறு கேட்டிருந்தார்கள். இக்கூட்டணியில் உருவான பெரும்பாலான பாடல்கள் தனித்துவமானவை என்றாலும் கூட சில பாடல்களில் ஒளிந்திருக்கும் நுட்பம் என்னை ஆச்சரியப்படுத்தியதுண்டு. அவற்றில் சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். பொதுவாக காதல் […]

Continue Reading »

நிறம் தீட்டுக…

நிறம் தீட்டுக…

Continue Reading »

பூப்பனை என்றாகி..

Filed in கவிதை, வார வெளியீடு by on September 16, 2018 0 Comments
பூப்பனை என்றாகி..

நான் பூப்பனையானேன் பூத்துக்கொண்டே வளர்கிறேன் எனது பூவில் அழகில்லை எனது பூவில் இனிமை இல்லை எனது பூவில் ஒரு கனவும் இல்லை கடல் ஓரத்து மணல் வெளியில் உயர்ந்து நிற்கிறேன் கடற் காற்றின் தடவுதலில் நான் வளர்ந்து போகிறேன். எனது முகத்தில் உதயசூரியன் உப்பு நீரைத் தெளித்துவிடுவான் உப்புக் காற்றைச் சாமரத்தோடு கலப்பான் கானலை விசிறுவான் போதையோடு சரிந்துகிடக்கும் மனிதக் கட்டைகள் என்னைத் தூரமாய்ப் பார்த்து உரையாடுவர். நான் பூப்பனையானேன் எள்ளிநகைக்கும்  தூக்கணாங்குருவிகள் என்னில் கூடுகளுக்குச் சொருகும் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad