Archive for October, 2014
சிவாஜி என்றொரு சிம்மம்
கம்பீரத் தோற்றம், கண்ணியத் தோரணை, கர்வம் கொண்ட கூரிய பார்வை இவற்றின் அடையாளம் ‘சிவாஜி கணேசன்’ என்ற ஏழு எழுத்துக்கள். வி.சி. கணேசன் என்ற துடிப்பான இளைஞன் தனது நடிப்பாற்றலின் திறனால், உலகமெங்கும் வியாபித்திருக்கும் தமிழரின் மனங்களில், செதுக்கிய எழுத்துக்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மன்றாயர், ராஜாமணி ஆகியோருக்கு பிறந்தவர் கணேசமூர்த்தி. வேட்டைத்திடல் சின்னையா கணேசமூர்த்தி என்பதே பின்னர் வி.சி. கணேசன் என்றானது. ராஜாமணி அம்மையார் விழுப்புரத்திலிருந்த தனது தந்தை வீட்டில் […]
பார்த்ததில் ரசித்தது
”சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும் சண்டை வச்சா, ஆரு செயிப்பாக?” – எனக்கும் என் நெருங்கிய நண்பன் வெங்கடேசனுக்கும் சிறு வயதில் அடிக்கடி வரும் தகராறு இதுவே. நாங்களிருவரும் அவ்வளவு ஒற்றுமையான நண்பர்கள், ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் இருவரும் கீரியும் பாம்பும் போலச் சண்டை போடுமளவுக்கு விரோதிகள். மிகத் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகன் அவன். நான் சிவாஜி கணேசனென்றால் உயிர் கொடுக்கவும் தயார்.. ”எம்.ஜி.ஆர் மாதிரி கத்திச் சண்டை போடமுடியுமாடா சிவாஜியால?” பொதுவாக என் தீர்ப்பு அனைத்தையும் மறு […]
மிஸிஸிப்பி நதி
அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய ஆறு மிஸிஸிப்பி நதி ஆகும். அதை ஆங்கிலத்தில் உச்சரிப்பதே சிறுவருக்கு ஒரு தனி மகிழ்ச்சி. MiS-SiS-Sip-Pi என்று பிரித்துக் கூறும்பொழுது சற்று வேடிக்கையாக இருக்கிறதல்லவா?. இவ்விடம் நாம் மணிக்கூட்டில் வினாடிகளைச் சரியாக எண்ணவும், கண்ணாமூச்சி விளையாடவும் One-Mississippi Two-Mississippi என்று உரத்துக் கூறி விளையாடுவதும் உண்டு. மிஸிஸிப்பி ஆறு ஆனது மினசோட்டாவில் வாழும் சிறுவர்கள் அறிந்த, பார்த்திருக்கும் பெரும் ஆறு ஆகும். இது மினசோட்டா மாநில ஐதாஸ்கா (Itasca) ஏரியில் ஆரம்பித்துப் பெரும் […]
சி்ப்பிக்குள் முத்து எப்படி வந்தது?
முத்துமாலை, தொங்கட்டான், சிமிக்கி எனப் பளபளக்கும் நகைகளை அம்மாக்கள், அக்காக்கள், பாட்டிமார் எனப் பலரும் பல சுப நேரங்களில் அணிந்திருப்பதைப் பார்த்திருப்போம். இந்த முத்துக்கள் ஒரு சிறு குறுமணி மணல் ஆனது சிப்பிக்குள் போய் உருவானது என்றால் நம்புவீர்களா? சிப்பியானது ஒரு கடலின் அடிப்புறத்தில் வாழும் உயிரினம். சி்ப்பியானது உலகளாவிய கடலின் பல இடங்களிலும் காணப்படும். ஆயினும் முத்துத்தரும் பெரும் சிப்பியானது உலகில் சில வெப்பமான கடல் மணற்தரைகளில் மட்டுமே காணப்படும். மிருதுவான உள்ளுடலையும் பலமான வெளிச்சுவரையும் […]
முக்தி
கோவிந்த ராஜய்யரின் கவலையெல்லாம் ஒன்றே. சில நண்பர்களிடம் மட்டும் சொல்லி அங்கலாய்ப்பார். “பகவான் நல்ல வாழ்க்கையைக் கொடுத்துட்டான், ஒரு குறை இல்லாம குடும்ப ஷேமத்தைப் பாத்துண்டான்… இருந்தாலும் மனசைப் போட்டு வாட்டற ஒரே விஷயம் நேக்கு ஒரு புள்ளக் கொழந்த இல்லையேங்கறதுதான்.. நானும் லக்ஷ்மியும் என் பொண்ணு பிரபாவைப் புள்ள மாதிரிதான் வளத்தோம்.. ஆனாலும் கட்டையில போற காலத்துல அவளால எனக்குக் காரியம் செய்ய முடியாதே… புள்ள கையால காரியம் செஞ்சுக்காம பரலோகத்துல முக்தி கெடைக்கறது எப்டி?” […]
ரோசா இதழ் பழப்பாகு (Rose-petal jam)
சின்னச் சின்ன ரோசா, ரோசாவே என் ராசாவே என்றெல்லாம் தமிழகச் சினிமாவில் பலரக நறுமணம் மிக்கச் செடிகளூடு பூங்காக்களில் ஓடியாடும் காதல் பாட்டுக் கேட்டிருக்கிறோம். இந்த அழகிய பூக்களை வாழ்க்கையில் பரிமாறியிருக்கிறோம். அதே சமயம் இந்த இதழ்களை எவ்வாறுதான் பலூடா பானம் தவிர்த்துச் சுவைக்கலாம் என்று சிந்தித்திருப்பீர்களா?. இதோ உங்கள் ஆர்வத்துக்கு ஒரு பழப்பாகு சமையல் குறிப்பு. வேண்டியவை; 8 ounce உடன் மலர்ந்த ரோசா இதழ்கள் (Fresh Petals) 1 மேசைக்கரண்டி எலுமிச்சைப் பழச்சாறு (Lemon […]
வருடாந்திர மாநில பொருட்காட்சி
மினசோட்டா மாநிலம் விவசாயத்தை மையமாகக் கொண்டு வளர்ந்த சமூகம். இவ்விடம் கோடைக் கால வருடாந்திர மாநிலப் பெருப் பொருட்காட்சி குழந்தைகளில் இருந்து கொடுக்குப் பல் இல்லாத கொள்ளுத்தாத்தா வரை யாவரும் விரும்பி்ப் போகும் ஒரு திருவிழா. வருடாந்திரப் பொருட்காட்சி 1265 Snelling Ave North நிரந்தரச் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.மினசோட்டா மாநிலச் சந்தை அமெரிக்காவில் நடத்தப்படும் கோடைகாலப் பெருஞ் சந்தைகளில் ஒன்று. இந்த மைதானம் 320 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. வழக்கம் போலப் பஞ்சு மிட்டாய், பல […]
ட்ரிக் ஆர் ட்ரீட் (தந்திரமா? பரிகாரமா?)
அமெரிக்க நாடெங்கும் அனைத்துச் சிறுவர் சிறுமியரால் விரும்பிக் கொண்டாடப்படுவது ஆண்டுதோறும் அக்டோபர் 31ம் தேதி நடக்கும் ஹாலோவீன். இக்கொண்டாட்டத்தின் வரலாறு பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இந்நிகழ்வைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஹாலோவீன், அந்நாட்களில், அயர்லாந்தில், கிராமப்புறங்களில் ஒரு மதச்சடங்காக நடைபெற்று வந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. இன்னும் சில குறிப்புகள் இது மறைந்து போன புனித ஆத்மாக்களின் நினைவாகக் கொண்டாடப்பட்டது என்கிறது. மற்றுமொரு கருத்துப்படி இது நவம்பர் மாத முதல் இரண்டு […]