\n"; } ?>
Top Ad
banner ad

Archive for April, 2017

அன்பின் அகிலம்

அன்பின் அகிலம்

அன்றலர்ந்த தாமரையாய் அந்தமுகம் விலகவில்லை…..
அன்பிற்கு நிரூபணமாய் அன்னையன்றி வேறொன்றில்லை !!
அளவில்லாப் பெருவலியும் அவளுக்குப் பொருட்டில்லை
அவதிகளைத் தாங்கியன்றோ அருமையுடன் ஈன்றாள்பிள்ளை !!

அவள்பட்ட துயரமெல்லாம் அன்றோடு நிற்கவில்லை
அக்கறையாய் வளர்த்தெடுக்க அவள்துயர் எல்லையில்லை
அரும்பாகத் தானுதித்து அரசாளும் யோகமில்லை
அதனாலே கிள்ளையதை அவளென்றும் விலக்கவில்லை !

Continue Reading »

நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி 2017

நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி 2017

ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி  ஸ்ரீ நாட்டியமஞ்சரிக் குழுவினரின் நடனப் போட்டி மினசோட்டா மாநிலத்தில் ப்ளூமிங்க்டன் நகரிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒன்று.   கடந்த ஆண்டு இப்போட்டியில்  பல குழுக்கள் இடம் பெற்றிருந்தனர்.  எனவே இந்த ஆண்டு போட்டியை 11 மணிக்குத் துவங்கி  இரவு 7 மணி வரை நடத்தி, போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் பரிசளித்து சிறப்பித்தனர். இந்த ஆண்டும் பரதநாட்டியம், பாலிவுட் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் […]

Continue Reading »

தொழிலாளர் தினம் – கவிதை

Filed in இலக்கியம், கவிதை by on April 30, 2017 0 Comments
தொழிலாளர் தினம் – கவிதை

இலக்குகளை நோக்கிய பயணத்தில்
அடி சறுக்கி மூச்சு முட்டி வாய் மண்தொட்டு
உதடு சிதறுண்டு செங்குருதி சிந்திடினும்
இலக்கே கொள்கையென்று நேர்வழியில் வீறுகொண்டு
தொழில் முடித்து காத்திருப்போம் தொழிலாளர் நாங்கள்

மழை – வெயில் – மூடு பனி தாண்டி வரிசைகள் நீண்டாலும்
காத்திருத்தல் ஒன்றே நேரிய வழியென்று காத்திருப்போம் கூலிக்காய்
‘செய்யாதே’ என்றால் செய்யாமல் இருப்பதற்கும்
‘செய்’ என்றால் செய்வதற்கும் பழக்கப்படுத்தப்பட்டு
பலமாய் சபிக்கப்பட்ட பூமிப் பந்தில் நாதியற்று நாட்கள் கழிப்போம்

துரதிர்ஷ்டவசமாக எம் வாழ்வை உம்மிடம் ஒப்படைத்து
உமக்கான பயணத்தில் எம்மை நாம் தொலைத்து

Continue Reading »

ராஜமெளலி – இந்தியாவின் நம்பர் 1 இயக்குனரா?

ராஜமெளலி – இந்தியாவின் நம்பர் 1 இயக்குனரா?

எந்தவொரு மனிதனும் அவன் சார்ந்த பிராந்தியத்தில், மக்களின் மனங்கவர்ந்து வெற்றிகளைப் பெற்ற பின், தனது அடுத்த இலக்காகத் தனக்கான எல்லைகளை விரிவாக்க எண்ணுவான். அரசியலோ, சினிமாவோ அல்லது அது எந்தவொரு துறையாக இருந்தாலும் வளர்ச்சி என்பது இப்படியே அடையப்படும். சினிமாவிலும் இப்படி ஒரு மாநிலத்தில் பெயர் பெற்ற கலைஞர்கள், புகழ் ஏணியில் மேலும் ஏற, தங்கள் மாநில எல்லையைக் கடப்பார்கள். அதனால் தான், ஒரு மொழியில் நன்கு வெற்றியடைந்த ஹீரோக்கள், அடுத்துப் பக்கத்து மாநிலத்தைக் குறி வைப்பார்கள். […]

Continue Reading »

தொழிலாளர் தினம்

தொழிலாளர் தினம்

வட அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கம் 1886, மே 1ஆம் திகதி தொடங்கப்பட்டது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மட்டுமே வேலை தரவேண்டும் எனக் கோரி வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன்விளைவாகத் தொழிலாளர்களின் தினசரி வேலைநேர அளவு நிர்ணயிக்கப்பட்டது. இதன் பயனாக ஒருநாளில் எட்டு மணிநேரம் வேலை எட்டு மணிநேரம் பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேரம் ஓய்வு ஆகியவற்றை வாதிட்டு வரையறுக்கப் பட்டது. உலக சமவுடமையின் தந்தையான கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது நண்பன் எங்கெல்ஸ் (Karl […]

Continue Reading »

பகுத்தறிவு – பகுதி 5

பகுத்தறிவு – பகுதி 5

(பகுதி – 4) நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்தத் தலைப்பைத் தொடர்வது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். சென்ற பகுதிகளுக்கு வந்த விமரிசனங்களும், கருத்துக்களும், கேள்விகளுக்கும் மனதுக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. என் கருத்தோடு உடன்படாதவர்களின் கேள்விகளும் உற்சாகமூட்டுவதாகவே அமைந்தன. நிச்சயமாக, மாற்றுக் கருத்துள்ளவர்களின் மன ஓட்டத்தையும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே எனது ஆசையும்கூட. பின்னூட்டங்கள் உற்சாகமாக அமையும் அதே சமயத்தில், நேரடியாக அனுப்பப்பட்ட சில கேள்விகளும், சந்தேகங்களும், மேலும் பொறுப்புணர்ச்சியோடு எழுத வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுவதாக […]

Continue Reading »

தாய்மை

Filed in இலக்கியம், கதை by on April 30, 2017 0 Comments
தாய்மை

கையில் இருந்த காய் கறி கூடையை மறு கைக்கு மாற்றியபடி வாசல்  கதவைத் திறந்தாள் அகல்யா.  உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டதும், பதட்டத்துடன் வேகமாக வழி நடையைக் கடந்து வீட்டிற்குள் பிரெவேசித்தாள். காய்கறி கூடையைச் சமையல் அறையின் கதவின் முன் வைத்து விட்டு, வீட்டின் உள் அறையை நோக்கி வேகமாக எட்டெடுத்து வைத்தாள். “ஹாசினி பட்டு எழுந்திட்டியா .. அம்மா வந்துட்டேன்.” அந்த அறையில் உள்ளே ஒரு பெரிய தொட்டி போல வைக்கப்பட்ட அந்தப்  படுக்கையில் […]

Continue Reading »

கயல்விழியும் கடல் கன்னியும்

கயல்விழியும் கடல் கன்னியும்

கடற்கரையோரக் குடிசையில் கீரிமலைக்கிராமத்தில் கயல்விழி எனும் பெண் தனது அம்மா அப்பாவுடன் வாழ்ந்து வந்தாள். கடலோரக் குடிசையோ சற்று பழையது, பூவரச மரத்தூண்கள் காலாகாலத்தில் சற்று உக்கி வாசல் சற்று தொய்ந்து போய்க் காணப்பட்டது. மேலும் யாழ்ப்பாண வலிகாமம் வடக்குப் பருவகாலத்தைப் பொறுத்து ஒன்றில் வடகிழக்கு வாடைக்காற்று மழை பனையோலையால் அமைக்கப்பட்ட கூரையில் இருந்து இடையிடையே மழை நீர் ஒழுகவும், அல்லது செவ்வானச் சூரியன் செங்கதிர்கள்  தூசியின் ஊடுறுழையவும் செய்தது. கயல்விழி காலையில் நித்திரை விட்டு எழும்புவாள். […]

Continue Reading »

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஏப்ரல் 2017)

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஏப்ரல் 2017)

கடந்த இரு மாதங்களில் வெளிவந்த பாடல்களில் சில, இங்கு உங்கள் பார்வைக்கு. எங்களது முந்தைய தொகுப்பைக் காண இங்கு செல்லவும். காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஃபிப்ரவரி 2017) டோரா – எங்க போற எங்க போற “லேடி சூப்பர் ஸ்டார்“ என்று அழைக்கப்படும் (!!) நயன்தாரா இப்போதெல்லாம் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். டோராவும் அப்படியே. படம் ரிலீஸ் அன்று நயன்தாராவுக்குகென்று, சென்னையில் […]

Continue Reading »

உங்கள் மின்னிணைய வரலாறு ஏலத்தில்

உங்கள் மின்னிணைய வரலாறு ஏலத்தில்

மின் வலயமானது அதன் ஆரம்பத்தில் சிற்சில  புத்திஜீவிகள், கணனித் தொழினுட்பவியலாளர்கள் குழுக்கள் தமது அறிவியல் தேவைக்காக அமைக்கப்பட்டது. மின் வலயம்  திறந்த மனப்பாங்குடன் கருத்துப் பரிமாறலையும் ஒருவர் தன்னிச்சையான கருத்துக்களைப் பரிமாறும் இடமாகவும் கருதப்பட்டது.  இந்தப் புரிந்துணர்வு பெருமளவில் தற்போது மாறிவிட்டது. இன்று நுகர்வோர் அந்தரங்கங்களைப் பகிரங்கமாக்குதல் ஆதாயமான விடயம். இந்த வர்த்தகக் குறிக்கோளை நோக்கி நுகர்வோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டங்கள் பலவீனமாக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய மின் இணையம் ஆக்கப்பூர்வமான படைப்பாளிகளுக்கு இடமல்ல; வெறும் நுகர்வோர் மையங்களே. […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad