Archive for January, 2022
பனிப்பூக்கள் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டி
ஆங்கிலப் புத்தாண்டு, தைப் பொங்கல், உழவர் திருநாள், திருவள்ளுவராண்டு துவக்கம் என ஜனவரி மாதம் கொண்டாட்டங்கள் நிரம்பி வழியும் மகிழ்ச்சியான மாதமாகும். பெருந்தொற்றின் வீரியம் புதிதாய் உருவெடுத்து அச்சுறுத்துவதால், கொண்டாட்டங்கள் சுருங்கி ஒரு கட்டுக்குள் அடங்கிப்போனதென்னவோ உண்மை. ஆனாலும் இன்றைய இணையத் தொழில்நுட்பம் பெருந்தொற்றின் கட்டுப்பாடுகள், முழுமையாகக் கொண்டாட்டங்களை முடக்கிவிடாமல் பார்த்துக் கொண்டதெனலாம். பனிப்பூக்கள் சஞ்சிகையின் பயணத்தில் இந்தாண்டு ஒரு மைல்கல்லாக அமைகிறது. வரும் தாய்மொழி தினமான பிப்ரவரி 21 இல், பத்தாம் ஆண்டில் நுழையவுள்ளது பனிப்பூக்கள். […]
காணாமல் போன பாடலாசிரியர்கள்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு பாடலாசிரியர்கள் கோலொச்சியிருக்கிறார்கள். தமிழ் திரையிசை பாடல் வடிவத்தை உருவாக்கிய சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கி, பாடல் படைப்பாக்கத்தில் உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், மேத்தா, வைரமுத்து, கங்கை அமரன், பிறைசூடன், பழனிபாரதி, அறிவுமதி, நா.முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி, தாமரை, சினேகன், விவேகா, மதன் கார்க்கி எனப் பலரும் பங்களித்துள்ளனர். ஒவ்வொருவரும் மொழியைத் தங்களது பாணியில் கையாண்டுள்ளனர். தங்களது மொழியில் அன்றைய காலக்கட்டத்து நாயகர்களைப் பாட வைத்துள்ளனர். […]
காதல் எப்படி பேசுகிறது
காதல் எப்படி பேசுகிறது கன்னக்குழி அழகில் மெல்லிய இதழ் விரிப்பின் சிவப்பில் மிரளும் கண் விழியின் தவிப்பில் பெருமூச்சுக்கு இடையில் வரும் மூச்சில் புன்னகையின் இதழவிழ்ப்பில் அன்பு தளும்பும் மென்மொழியில் சீரற்ற இதயத் துடிப்பில் தனிமையில், மௌனத்தில் மற்றும் கண்ணீரில் காதல் பேசுகிறது. மின்னும் கண் பயத்தில் இணை சேர்ந்த மகிழ்ச்சியில் பெருமிதத்தில், பெரும் இதயத்துள் காதல் பிரகாசத்துடன் நிரம்பி வழிகிறது. அன்பான முகத்தில் சிலிர்த்து நடுங்கும் உடலின் அசைவில் வெட்கத் தொடுதலில் மகிழ்ச்சி மற்றும் வலிகளின் […]
மார்கழி மாதங்களில் திருப்பாவை
இறை வழிபாட்டில் ஒவ்வொரு மதத்திலும் பல வகைகள் இருப்பினும், பக்தியில் உருகி பாக்கள் பாடி, இறை வழிபாடு செய்வது அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒன்று. சங்க இலக்கியத்தில் பெருமளவு பக்தி இலக்கிய நூல்கள் உள்ளன. வேறு எம்மொழியிலும். தமிழ் மொழியில் தோன்றிய அளவு பக்தி இலக்கிய நூல்கள் தோன்றவில்லை. பக்தி இலக்கிய நூல்களில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் மிக முக்கியமானவை. பன்னிரு ஆழ்வார்களில் “ஒரு பெண்ணின் தமிழ்” என்று அழைக்கப்பட்ட திருப்பாவை எழுதிய ஆண்டாள் பல […]
பனியில் கார்டினல் குருவி (Northern Cardinal)
அழகான பிரகாசமான சிவப்பு சிறகுகளும், சொண்டுகளையும் அதே சமயம் நிற வேறுபாடு தரும் கன்னங்கவரும் கறுப்பு நிற கண் பகுதிகளைக் கொண்ட பறவைதான் கார்டினல் குருவி. இது மினசோட்டா மற்றும் வட கிழக்கு அமெரிக்கக் கண்டத்தில் இலகுவாக அடையாளம் காணக்கூடிய பறவையாகும். குறிப்பாக வெள்ளைப் பனிப் பின்னணியில், இலையற்ற செடிகள், மரங்களில் இருந்து பாடுவது கண் குளிர் காட்சியாகும். இந்தக் குருவி இலத்தீன் பறவை வகைப் பிரித்தலில் Cardinalis cardinalis என்று அழைக்கப்படும். கார்டினல் பொதுவாக பத்தைக்காட்டு […]
உலகின் அவசர, அத்தியாவசிய தேவைகள்
புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். சமீப ஆண்டுகளைப் போல 2022 ஆம் ஆண்டும் கேள்விக்குறியாகவே தெரிகிறது. கோவிட்டின் திரிபுகள், ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராட்டம், நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கிடையுமான பயங்கரவாதம், மனிதாபிமான நெருக்கடிகள், உலகப் பருவ நிலை மாற்றம், இயற்கை சீற்றங்கள் என எண்ணற்ற சவால்கள் எதிரே நிற்கின்றன. துரதிர்ஷ்டவசமாக அவை தானாக மறைந்துபோகும் சவால்கள் அல்ல. கொரோனா தொற்றால் பல இலட்சம் உயிர்களை இழந்துவிட்டோம்; மேலும் இழந்து வருகிறோம். . அதன் நீட்சியாக வறுமை, பஞ்சம், […]
ரசனை வசப்படுமா?
முன்பு எப்போதேனும் படம் பார்ப்போம். நமது அபிமான நடிகர் நடித்த படம் என்றால், எப்படி இருந்தாலும் பார்த்து விடுவோம். இல்லையென்றால், படம் நன்றாக இருக்கிறதென்று யாராவது சொன்னால் பார்த்துவிடுவோம். இல்லை, பொழுது போக்க வேண்டும் என்றிருந்து, படம் நல்லாயில்லை என்று சொன்னாலும், திரையரங்கு சென்று படம் பார்ப்போர் உண்டு. இருக்கும் திரையரங்குகளில் நான்கு படங்கள் ஓடும். அதில் ஏதேனும் ஒன்றைப் பார்த்துவிட்டு திரும்புவோம். செலவையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். அதே போல், தொலைகாட்சியில் படம் பார்ப்பது என்றால், […]
சமையல்.. சமையல்.. சமையல்..
சில வருடங்களுக்கு முன்பு, ஒரு சர்வே எடுத்திருந்தார்கள். உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் சமைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் குறித்து அந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. உலகிலேயே சமையற்கட்டில் அதிக நேரம் செலவிடும் நாடு – இந்தியா, என்று ஆய்வு முடிவில் வந்திருந்தது. இதற்கு எதற்கு ஆய்வு, நமக்குத் தான் தெரியுமே!! என்கிறீர்களா? உண்மை தான். மற்ற நாடுகளுடான ஒப்பீடு, நமக்குப் பயனளிக்கும் தகவல்கள் தரும் வகையில் அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தன. நமக்குத் தெரிந்த விஷயமான, உலகிலேயே அதிகம் சமையலில் […]