admin
admin's Latest Posts
எழுத்தாளர் பாலகுமாரன்

‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ – தமிழ் பேசும் பலரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பயன்படுத்திய இந்த வரிகளை எழுதியவர் இன்று இல்லை! 1980களில் தமிழறிந்த இளவட்டங்களைத் தனது வசீகர எழுத்துக்களால் கட்டிப்போட்ட, ‘எழுத்துச் சித்தர்’ என்று கொண்டாடப்படும் பாலகுமாரன் மறைந்துவிட்டார். சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சமயத்தில்,புதுக்கவிதை எனும் கவிதைக் கிறுக்கல்கள் புற்றீசல் போல பெருகியபோது க. நா. சு என்ற இலக்கிய விமர்சகர் ‘எழுத சோம்பல் படுகிறவன் புதுக் கவிதை எழுதுகிறான்’ என்று சொன்னதைக் […]
ஒரு நாள் போதுமா?

சேருங்காலச் சுகத்தில் உதித்த உயிரை ஒருமுழக் கொடி பிணைத்த உடம்பை பிரித்தெறிந்த நொடியில் அணைந்து போகாது வரிந்தெடுத்து நெஞ்சோடு அணைத்த வித்தகமே! அன்று தொடங்கி அந்தம் வரையில் என்றும் சேய்நலம் கருதும் தாய்மையே நின்றன் திருப்புகழை நினைந்து உருகிட இன்றொரு நாள் மட்டும் போதுமா? உந்தியெழும் சூரியன், அந்திசாயும் சந்திரன் சிந்திச்சிதறும் கார்காலம், நிந்தைதரு வேனிலென விந்தைமிகு இயற்கையது பிறழ்ந்து தவழ்ந்தாலும் சிந்தைமாறா சிரத்தையோடு மக்களை நேசிப்பாயே! துறவுபூண்ட ஞானிகளும் மறக்கவியலா உறவு வரவுஅளக்கும் வணிகரும் கணிக்கவியலா […]
கேம்பிரிஜ் அனலிடிக்கா சொடுக்குதல் மூலம் சூசக வாக்குகள்

அமெரிக்காவில் 87 மில்லியன் பிரசைகளின் முகநூல் (Facebook) தனிப்பட்ட தகவல்கள் சூறையாடப்பட்டு தகாதவகையில் 2016 தேர்தலில் உபயோகிக்கப்பட்டமை கவலைக்குரிய விடயம். மின் இணைய சொடுக்கலிலிருந்து சுயேட்சை வாக்குகளுக்கு வரம்பு கட்டி, தேர்தலில் சாதகமான வேட்பாளர் பெட்டிகளை நிரப்புவது சாத்தியம் என்ற நிலைமையை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது. இந்தச் சூசக நடவடிக்கை சுதந்திர நாட்டின் சுயேட்சை மக்கள் எனும் சிந்தனைக்கு முரணானது. எனினும் இன்று மக்களின் முகநூல் (Facebook), டுவீட்டர் (Twitter) போன்ற சமூக வலயங்களை. முன்னர் இருந்த பொதுசன […]
உலக நாடுகளின் கலாச்சாரத் திருவிழா (Festival of Nations)

ஒவ்வொரு வருடமும் செயிண்ட் பால் ரிவர் செண்டரில் நடைபெறும் ‘ஃபெஸ்டிவல் ஃஆப் நேஷன்ஸ்’ (Festival of Nations) என்னும் பல்வேறு நாட்டு மக்களின் திருவிழா, இந்தாண்டு மே மாதம் 3ஆம் தேதியில் இருந்து 6 ஆம் தேதிவரை நடைபெற்றது. வெவ்வேறு நாட்டு மக்களின் உடை, உணவு, கலை சார்ந்த கலாச்சாரங்களை இங்கு ஒரே இடத்தில் ஒரு கதம்பமாகக் காணும் வாய்ப்பு பார்வையாளர்களுக்குக் கிடைத்தது. இந்த விழா கடந்த 86 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் […]
இரும்புத்திரை

ஒரே மாதிரி கதைக்களம் இல்லாமல் படம் எடுப்பது சிறப்பு, அதையும் பார்க்கும்படி எடுப்பது மேலும் சிறப்பு, அதில் ஒரு கருத்தைச் சொல்லி, பார்ப்பவர்களை அது குறித்து யோசிக்கச் செய்வது பெரும் சிறப்பு. இந்தச் சிறப்பினைச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மித்ரன் அவர்கள். இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் உலகின் பாதகங்களைச் சீரியஸாக அலசியிருக்கிறார் மித்ரன். முதலில் அவருக்கு நம் பாராட்டுகள். ராணுவப் பயிற்சி அளிக்கும் அதிகாரியாக வரும் விஷால், அடிக்கடி அதிகம் கோபம் அடைவதால், பணி நீக்கம் செய்யப்பட்டு […]
சித்திரைத் தமிழிசை விழா

முனைவர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர் பங்கேற்ற சித்திரை தமிழ் இசை விழா ஏப்ரல் 29 ஆம் தேதியன்று ப்ளுமிங்டன் கென்னடி ஹைஸ்கூலில் நடைபெற்றது. இந்த ஆண்டு சித்திரையில் கோடையை வரவேற்பதா அல்லது வசந்தத்தை வரவேற்பதா என்ற குழப்பத்தில் இருக்கும் மினசோட்டாவாசிகளுக்கு இந்த இசை தம்பதியினரை ஆரவாரத்துடன் வரவேற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. அனிதா குப்புசாமி ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய “மலரும் மொட்டும்“ நிகழ்ச்சியை, பல ஆண்டுகள் கழித்து […]
விடியும் நல்ல நாளை

விளம்பி வருடம் வரும் நேரம் விளிம்பில் வெதும்பி நிற்கிறது தமிழகம்! விரும்பியோ விரும்பாமலோ தமிழ் எனது விலாசம் விருந்தினரை வந்தாரை வாழவைப்பது எம் கலாச்சாரம்! விளம்பரத்திற்காக இந்தியனை வேற்றுமைபடுத்தி வீண் கலகம் செய்து விஷத்தை கக்கும் விஷமிகளின் வஞ்சனை வலையில் வீழ்ந்து விந்தைகாரர்களின் வசீகரத்தில் கட்டுண்டுக் கெட்டது! வினோதமாய் அன்னியமானது என் தமிழகம் இன்று! வீறுகொண்ட தன்னலமற்ற தலைவனைத் தேடுகிறது விவேகமான விவேகானந்தரின் இளைஞனுக்கு ஏங்குகிறது! வித்திட்டவரல்லவா நாம்? நாகரீகத்துக்கு வித்திட்டவரல்லவா நாம் […]
முதுமைக் காதல்

மெருகூட்டும் உன் கன்னங்கள் மருவற்ற முகத்திற்கு அழகு சேர்க்க!! மொழிபேசும் உன் இதழை மெய்மறந்து நான் பார்த்திருக்க வளையோசை கேட்டுக்கொண்டே மடிமீது தலை சாய்க்க!! அசைந்தாடும் கூந்தல்; அதில் அலைபாயும் காற்று இசையாவும் உந்தன் கால்கொலுசில் விளையாடும் அழகே!! கதைபேசும் கவிதையே கைகோர்க்கும் தாரகையே விலைபேசும் உன் கண்ணோடு உரையாடல் நான் தொடங்க! வார்த்தைகள் தடுமாறி குறிலும் நெடிலுமாய் முடிவுற்று போயின! எதைச் சொல்லி மறைப்பேன் – நான் உன் சிரிப்பொலியில் […]
நி(தி)றம்படப் பழகு

ஏனோ இந்தக் கேள்வி இப்போதெல்லாம் சுஜாவிற்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்த தொடங்கி இருந்தது. அவள் எவ்வளவுதான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள நினைத்தாலும் சில நேரங்களில் அது முடியாமல் போய்விடுவதும் உண்டு.அவள் தன் கட்டுப்பாட்டை இழக்கும் போதெல்லாம் அவள் கணவனிடமிருந்து வரும் விமர்சனம் இப்போதெல்லாம் அவளிற்குப் பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அவன் தினமும் அவளிடம் “ சுஜா எதையும் மறந்து விடுவதுதான் குழந்தைகளின் இயல்பு. நீ அறிவுரை சொல்லும் நேரத்தில் அதை எவ்வளவு வேகமாக ஒரு குழந்தையால் புரிந்து கொள்ள […]
இணையத்தில் இனிமையாக இருந்து கொளல் எப்படி?

நாளாந்த நடத்தைகள் பற்றி இணையத்தில் துச்சமான, துக்கமானச் செய்திகள், அறிக்கைகள் வருகினும் அவற்றை முற்றிலும் உண்மையென நம்பி நாம் எடுத்துக் கொள்ளலாகாது. மனிதாபிமானம் என்பது இலத்திரனியல் நூற்றாண்டிலும் தொன்மையானது . இது நாம் நாளாந்தம் மற்றவருடன் பேணக் கூடியது, பேணவேண்டியது. இதே மனிதாபிமானத்தை நாம் நாளாந்தம் உபயோகிக்கும் இணையத்திலும் கடைபிடிக்கவேண்டும், இணையத்தில் தொடர்பு நன்னெறிகளைப் பேணல் மற்றவர்கள் நுகர்வுக்கு ஒரு கருத்தை எழுதும் போதும் சற்றுச் சிந்தித்து எழுதுவதும் , சித்தரிப்புக்களைப் பகிர்வதும் நலம். நாம் பரிமாறும் […]