\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இலக்கியம்

இறைத்தூதர்

இறைத்தூதர்

அறைந்தேன் ஆணியதை மிகச்சிறிதாய், படம் மாட்ட! அது சற்றே விலகி சுண்டுவிரல் பதம் பார்க்க, அழுதேன் சுருண்டு விழுந்தே, விளைந்த வலி மாற! அந்த வலி சற்றே நீங்க, சடுதியில் மனம் நினைக்க,   அகத்தினிலே திருவுருவாய் ஆண்டவர் மலர்ந்தருள, அவர்மேனி சிலுவையிலே ஆணிகளால் நிறைந்தறைய, அங்கமெலாம் உதிரமுமாய் அணிவித்த முள்கிரீடமென, அவயமெலாம் வலித்திருக்க அவைகருதா நகைப்புற்ற   அவதார புருஷரவர் அமைதியாய் அகிலமுய்ய அபயமென்றே இறங்கிவந்த அன்புருவாம் இறைத்தூத! அவதரித்த நாளிதிலே அங்கமுழுதும் புழுதிபட அறிந்த […]

Continue Reading »

கிறிஸ்துமஸ் மனோநிலை

கிறிஸ்துமஸ் மனோநிலை

கிறிஸ்துமஸ் மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கொண்டாட்டம். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் கொண்டாடப்படும் விடுமுறையான நத்தார் அல்லது கிறிஸ்துமஸ்மற்றும் அதனுடனான மனோதத்துவ மகிமை தமிழர்களாகிய எமக்கும், ஏனையவர்க்கும் ஆச்சரியத்தின் ஆழ்ந்த உணர்வைக் கொடுக்கக் கூடியது. இது பலருக்கு ஆழ்ந்த மத முக்கியத்துவத்தைக் காட்டுவதாக இருந்தாலும், கிறிஸ்துமஸ் மனோநிலையானது மத நம்பிக்கைகளின் எல்லைகளுக்கு அப்பால் நீண்டுள்ளது. மகிழ்ச்சி, இரக்கம், ஒற்றுமை மற்றும் கொடுக்கும் மனப்பாங்கு ஆகியவற்றின் உலகளாவிய கொண்டாட்டத்தைத் தழுவுகிறது. இந்தக் கட்டுரையில், கிறிஸ்துமஸ் ஆவியின் சாராம்சம், […]

Continue Reading »

இயேசு பிறப்பு நற்செய்தி

இயேசு பிறப்பு நற்செய்தி

ஆண்டின் இறுதியும் – புதிய ஆண்டு புகுமுன் நிகழும் ஆண்டவர் பிறப்பு நற்செய்தியும் ஆவல் தூண்டிட   ஆயிரம் வர்ண விளக்குகள் ஆதவன் அடங்க மின்னி ஆகாயம் ஒளிர்ந்து ஆனந்தம் பொங்கிட   ஆடம்பரத் திருவிழா ஆட்டங்கள் களைகட்ட  ஆன்ம இசை விருந்துகள்  ஆசையாய் அரங்கேற   ஆகம வார்த்தையானவரை  ஆனந்த பாசுரம் பாடி  ஆலயத்திலும் அகத்திலும் ஆராதித்துப் போற்றிட   ஆதி இல்லாதோன் மகனே ஆன்ம நேசராய் அகிலம் காக்க ஆவியார் அன்னை மரியை ஆட்கொள்ள […]

Continue Reading »

செம்புலம்

செம்புலம்

முன் குறிப்பு: நிஜங்களின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் நினைவான நிழற்கதை! 1919 ஆம் வருடம், ஏப்ரல் மாதம் பதிமூன்றாம் திகதி, அறுவடை முடிந்து பஞ்சாப் மக்கள் சூரியனுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடும் பைசாகித் திருநாள். மாலை சுமார் நான்கு மணி முப்பது நிமிடம்!!! அமிர்தசரஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அக்ரஹாரம். பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்து குடி பெயர்ந்த பல குடும்பங்கள் தங்கியிருந்த அந்த வீதியை அவர்கள் அக்ரஹாரம் என்று அழைத்தனர். அங்கிருந்து ஒரு ஃபர்லாங்க் தூரம் […]

Continue Reading »

விண்மீன்கள் வெடிப்பைக்களைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முதல் செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளார்கள்

விண்மீன்கள் வெடிப்பைக்களைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முதல் செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளார்கள்

விண்மீன்கள் / நட்சத்திரங்கள் வெடிப்பைக்களை வெற்றிகரமாக அடையாளம் கண்டு உறுதிப்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு (A.I.) கருவியை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்மீன்கள் வெடிப்பைக்கள் ஆங்கிலத்தில் சூப்பர்நோவா (Supernova) என்பது ஒரு நட்சத்திரத்தின் மிகவும் பிரகாசமான, சக்திவாய்ந்த வெடிப்பு என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) தெரிவித்துள்ளது. ஒரு நட்சத்திரத்தின் வாழ்நாளின் முடிவில் வெடிப்பு நிகழ்கிறது. விண்மீன்கள் வெடிப்பைக்களைக் கண்டுபிடிப்பதற்கான தற்போதைய செயல்முறை பொதுவாக இயந்திரங்கள் மற்றும் மக்கள் இரண்டையும் உள்ளடக்கியது. தொலைநோக்கிகள் இரவு வானத்தின் படங்களை […]

Continue Reading »

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

வெப்பச் சூழ்நிலை காரணமாக உலகம் கொதிநிலையை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்கிறோமோ இல்லையோ, ஆனால் கண்ணுக்கெதிரே பகை, வன்மம், பழிவாங்கும் மனப்பான்மை ஆகியவற்றால் பூமி கொப்பளித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. பல நூறாண்டுகளாக அடக்குமுறையில் சிக்கிச் சிதறுண்டு போன பாலஸ்தீனர்களின் கோபம் மற்றும் ஆற்றாமையால்  துடித்துக் கொண்டிருந்த ‘டைம் பாம்’  ஒன்று பயங்கரவாதிகளின் கையில் சிக்கி வெடித்துச் சிதறியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பியாவில் கிளம்பிய யூத எதிர்ப்பு, சியோன் இயக்கம் உருவாகக் காரணமாகயிருந்தது. இவர்களின் […]

Continue Reading »

இயற்கையின் அமைதியான அழகைத் தழுவுதல்

இயற்கையின் அமைதியான அழகைத் தழுவுதல்

மாறிவரும் பருவங்கள் முழுவதும் அதன் அழகை வெளிப்படுத்த இயற்கை ஒரு நேர்த்தியான வழியைக் கொண்டுள்ளது.  ஆறுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நன்னீர் ஏரிகளில், இயற்கை உலகிற்கு ஒரு தனித்துவமான, எழில் மிகுந்த அழகியலைச் சேர்க்கும் வண்ண இலைகளின் மயக்கும் மாற்றத்தை எவரும் காணலாம்.  இந்த நிகழ்வு புலன்களைக் கவர்வது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுடன் ஆழமான தொடர்பைத் தூண்டுகிறது.  இந்த நீர் நிலப்பரப்புகளில் மாறிவரும் இலைகளின் நிறங்கள் எவ்வாறு நம் வாழ்க்கையை வளப்படுத்துகின்றன என்பதை ஆராய்வோம்; மற்றும் இயற்கைக்கும் நமது இருப்புக்கும் […]

Continue Reading »

தமிழ்க் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் அமெரிக்காவில் நன்றி நவிலல்

தமிழ்க் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் அமெரிக்காவில் நன்றி நவிலல்

‘நன்றி நவிலல்’ (Thanks giving) என்பது அமெரிக்கர்கள் ஒன்று கூடி தங்கள் வாழ்வில் கிடைத்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரம். நாம், தமிழ்க் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் இந்த நேசத்துக்குரிய விடுமுறையைச் சற்றே மாற்றியமைப்பதன் மூலம், நமது மரபுகள், சடங்குகள் மற்றும் மதிப்புகளுடன் இக்கொண்டாட்டத்தை வளப்படுத்தலாம். தமிழர் பண்பாட்டைப் பொறுத்தவரையில், கோலக் கலை, கர்நாடக இசை மற்றும் பல கலாச்சார விருந்துகள் போன்ற கூறுகளை இணைப்பது,  எந்தவொரு விழாவின் ஆழத்தையும் பன்முகத்தன்மையையும் அதிகரிக்கும். இவை பலரும் ஒருங்கிணையும் சகிப்புத்தன்மையை […]

Continue Reading »

நானே சிந்திச்சேன் – கல்வியா? கைத்தொழிலா?

Filed in கதை, வார வெளியீடு by on October 30, 2023 0 Comments
நானே சிந்திச்சேன் – கல்வியா? கைத்தொழிலா?

நானே சிந்திச்சேன் – கல்வியா? கைத்தொழிலா? “என்னதான் சொல்லு.. ‘டன்கின்ஸ்’ காஃபியை அடிச்சுக்க முடியாது மச்சி” – காபி கப்பை மேஜையில் வைத்துவிட்டு, ‘கிளேஸ்ட் டோனட்’ ஒன்றைப் பக்குவமாகப் பிடித்தபடி, பேச்சைத் தொடங்கினான் ஜனா. “ஆமாமா.. அதுக்குத்தானே ‘அமெரிக்கா ரன்ஸ் ஆன் ‘டன்கின்ஸ்’ன்னு சொல்றாங்க..” “எவன் அப்டி சொன்னது.. ‘டன்கின்ஸ்’ ரன்ஸ் ஆன் யூ.. நம்ப குஜ்ஜு ஆளுங்கதான் இந்த காஃபி சாம்ராஜ்யத்தையே கட்டி ஆளறாங்க.. குஜராத்துன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பாத்தியா? செம […]

Continue Reading »

யாரவள்?

Filed in கதை, வார வெளியீடு by on October 30, 2023 0 Comments
யாரவள்?

தீ ஜுவாலை போல் அதிகாலை சூரிய வெளிச்சம் தொலைவிலிருந்த நீர்த்தேக்கத்தில் பட்டு அந்தப் பகுதியையே ஜொலிக்கச் செய்துகொண்டிருந்தது. மஞ்சளையும், குங்குமச் சிவப்பையும் கலந்து, குழைத்தெடுத்துத் திட்டுத் திட்டாய்ப் பூசியது போன்ற வர்ண ஜாலம். குளப் பகுதியின் அருகில், சிறிய நாரைக் குடும்பம் ஒன்று, சுறுசுறுப்புடன் இரை தேடி இங்குமங்குமாய் நடந்துகொண்டிருந்தது. அதிலும் அந்த குட்டி நாரைக்கு அதிகப் பசி போல. பெரிய நாரைகளுக்கு முன்னால் நடந்தவாறு, அலகினால் நிலத்தில் குத்திக் குத்தி பசியாற்றிக் கொண்டது. பின்புல சூரிய […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad