கதை
சுமை தாங்கி

“வாங்க,வாங்க”என்று பாசத்துடன் வரவேற்ற பெற்றோரைப் பார்த்து நெகிழ்ந்து போனாள் ராதிகா .தன் இரு பிள்ளைகளையும் காரிலிருந்து இறக்கி வாடகையைக் கொடுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.”எல்லோரும் சௌக்யமா? மாப்பிள்ளை வரவில்லையா? எப்படி இருக்கிறார்?”என்று கேட்ட அப்பாவின் அன்பான கேள்விகளின் பதிலுக்கு ‘எல்லோரும் நலமே’ என்று தலையசைத்தாள் நந்திதா. “வா! காபிகுடி, டிபன் சாப்பிடு, களைத்து போய் வந்திருப்பே, வெந்நீரில் குளிச்சுட்டு வாங்க’ என்று இரு பேரன்களையும் கட்டியணைத்தபடி கூறினாள் அம்மா. இந்த வீட்டில்தான் எத்தனை மகிழ்ச்சி அலைகள்,.இதிலிருந்து ஒரு துளியாவது […]
அவள் குழந்தை

விமானம் கிளம்பியதில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த பெண் ஏதோ பதட்டத்திலேயே இருக்கிறாள். உள்ளே வந்து இருக்கையில் அமரும் போதே பார்த்தேன். கண்களில், உடலில் ஒரு பதட்டம். மேலே பெட்டியை வைக்கும் போது கைகளில் ஒரு சின்ன நடுக்கம். நேராக உட்காராமல் சற்று சரிந்தே உட்கார்ந்தாள். சிறிது நேரம் வலப்புறம் திரும்பி மடிந்து அமர்ந்தாள். பொறுக்காமல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே மீண்டும் இடப் பக்கம் மடிந்து அமர்ந்து கண்களை மூடினாள். ஒரு ஐந்து நிமிடங்கள் […]
அம்மாவின் அழுகை

அம்மாவின் அழுகுரல் எந்த மகனின், மகளின் காதுக்கும் எட்டவில்லை ; எட்டினாலும் எந்த மகனுக்கும் , மகளுக்கம் மெய்யறிவு இல்லாததனால் அம்மாவின் அழுகுரலுக்கு செவிமடுக்கும் திறன் இல்லாதவர்களாக பிள்ளைகள் இருந்தார்கள். பிள்ளைகளின் காது செவிடாக இருந்து , காது கேட்காமல் இருந்திருந்தாலாவது தாயின் மனம் அமைதி பெற்றிருக்கும் ; செவிட்டுப் பிள்ளைகளுக்குக் காது கேட்கவில்லை …….. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற இரக்க உணர்வாவது தாயிற்கு மேலிட்டிருக்கும். சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின் வகைதெரிவான் […]
புலம்பெயர் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள்

(“புது உலகம் எமை நோக்கி” என்னும் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு) அறிமுகம் ஈழத்தில் 1980களில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பெரும்பாலானோர் மேற்கு ஐரோப்பாவிற்கும், வட அமெரிக்காவிற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் புலம் பெயர்ந்து சென்றுள்ளார்கள். இவ்வாறு புலம் பெயர்ந்து சென்றவர்களில் கணிசமானோர் தங்களுடைய துன்பங்கள் மற்றும் அனுபவங்களை எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதற்குப் புலம்பெயர் நாட்டில் இருந்து வெளிவந்துள்ள சஞ்சிகைகள் களமமைத்துக் கொடுத்துள்ளன. அந்தவகையில் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இச்சிறுகதைகளில் புலம்பெயர்ந்து சென்றுள்ள பெண்களின் பிரச்சினைகள் […]
அந்திப் பூக்கள்

தாராபாய் முதியோர் இல்லத்திற்கு அந்த சிட்டியில் நல்ல பெயரும் புகழும் உள்ளது. இரண்டு முறை தன் சமுதாயத் தொண்டுகளுக்காக தேசிய விருது பெற்ற நிறுவனமும் கூட. பெரிய மாளிகை, நாலு பக்கமும் விசாலாயமாய் வளர்ந்த தென்னை , மா வேப்ப மரங்கள். பக்கத்தில் தாமரைகளுடன் ஓர் அழகிய குளம், அதைச் சுற்றி பூங்கா. அதில் நாற்காலிகள், பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. மரத்தோடு இணைந்த பூக்கொடிகள், அதில் அழகாய்ச் சத்தம் செய்து கொண்டுள்ள வண்ண வண்ணப் பறவைகள். சுமார் காலை […]
பானு டீச்சர்

பானு டீச்சர் – எல்லோரையும் தலை நிமிர்ந்து பார்க்கவைத்த ஒரு நபர். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்கிற இலக்கணம் வகுத்தவர் என்றால் அது டாக்டர் ராதாகிருஷ்ணன் என எல்லோரும் சுலபமாக சொல்லிவிடுவார்கள். ஆனால் ஒருஆசிரியை எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை புதியதாக வகுத்துக்கொண்டு இருப்பவர் பானு டீச்சர் என்றுதான் அங்கு இருப்பவர்கள் சொல்வார்கள். ஒரு நடிகர் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் , என்ன அடை மொழி வைத்துக் கொண்டாலும் , பொது மக்கள் […]
முனைவர்

“பழங்காநத்தம் ஸ்டாப்பிங்கெல்லாம் இறங்கிக்கங்க !” என்று நடத்துனர் அறிவித்ததும், வேகம் குறைந்து வந்து நின்ற அந்த அரசுப்பேருந்திலிருந்து நிவேதிதா வெகு ஜாக்கிரதையாகச் சாலையில் இறங்கிக்கொண்டாள். “அம்மா, நீங்க சொல்ற இடம் , ரெயில்வே கேட்டைத் தாண்டி போனா வரும்னு நினைக்கிறேன். விசாரிச்சுப் போயிக்கங்கம்மா !” என்றார் நடத்துனர். “ரொம்ப தேங்க்ஸ் சார்! ” என்றாள் நிவேதிதா. ‘இது தான் பழங்காநத்தத்துக்கு முந்தின ஸ்டாப்பிங். முதல்லயே கண்டக்டர் கிட்ட சொல்லி வெச்சது நல்லதாப்போச்சு’ என்று நினைத்துக்கொண்டாள். மதுரை வெயில் […]
மனக்குப்பை

பீரோவுக்கு அடில, கட்டிலுக்கு அடிலன்னு விட்டுப் பெருக்கணும்னு எத்தனை தடவை சொன்னாலும் தெரியறதில்ல….! தன் கணவரிடம் அந்தம்மாள் சொல்லியதே காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது சம்பங்கிக்கு. சாலையில் போய்க் கொண்டிருந்த லாரியின் பேரிரைச்சலை மீறி அந்தக்குரல் இவள் காதில் அசரீரியாய் ஒலித்தது. யதார்த்தமாய்ப் பேசிய பேச்சாய் அதை எப்படிக் கொள்வது? வழக்கத்திற்கு மாறாய் சற்றுச் சத்தமாகத்தானே அந்தக் குரல் ஒலித்தது. அருகில் நின்று பல் துலக்கிக் கொண்டிருந்த கணவரிடம் அப்படிச் சத்தமாய்ச் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன? […]
அபியும்..அம்மாவும்..

நாய் வளர்க்க வேண்டும் என்று திடீரென்று ஒரு நாள் அபிக்குத் தோன்றி விட்டது. ” அம்மா..நம்ம வீட்டுல நாய் வளர்க்கலாம்மா..” என்றாள் சமையலறையில் வந்து கொஞ்சிக் கொண்டு. ‘அதான் உன்னை வளர்க்கிறோமே..போதாதா..” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் சொல்லவில்லை.. ” நாயெல்லாம் ரொம்பக் கஷ்டம் அபி..நம்மால் முடியாதும்மா.. ” “ஏன் முடியாது..என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார் வீட்டுலேயும் வளர்க்கிறா ? ஸ்கூல்ல அவங்கவங்க அவங்கவங்க நாயைப்பத்திச் சொல்லும்போது எனக்கு எத்தனை ஆசையா இருக்கு தெரியுமா..” ” நீ ஸ்கூலுக்கு […]
கடிதம்

“அம்மா இண்டைக்கு போஸ்மென் கெம்பஸ் செலக்சன் லெற்றர் கொண்டு வருவான், கொஞ்சம் கவனமா இருங்க“. “சுமன் மஞ்சுக்கிட்டயும் சொல்லப்பா”. மஞ்சுவை சுமன் அழைத்தபோது “அண்ணா நேற்றுப் புள்ளா அம்மாவும் நானும் கடப்பில காவல் இருந்தனாங்க, இண்டைக்கும் அப்பிடித்தான், அத நீ சொல்லயா வேணும்“. “அதுதானே வாயாடி” எனக்கூறி சுமன் கடைக்குப் புறப்பட்டுச் சென்றான். “அம்மா லெற்றர் வருதோ இல்லையோ றோட்டால போற எந்தப் போஸ்மெனயும் நான் விடுறதாயில்ல” எனக்கூறிக் கதிரை ஒன்றைத் தூக்கிக்கொண்டு வீதியில் உள்ள மரநிழலிற்குச் […]