\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for November, 2021

சங்கீத கலா வித்தகர் டி.என். பாலமுரளி பேட்டி

சங்கீத கலா வித்தகர் டி.என். பாலமுரளி பேட்டி

கனடாவில் வசிக்கும் பன்முக இசை கலைஞர், ஆசிரியர், சங்கீத கலா வித்தகர் திரு. டி.என். பாலமுரளி அவர்கள் பனிப்பூக்களுக்கு வழங்கிய இப்பேட்டியில் அவர் தனது இசை பின்னணி குறித்தும், இசை அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.   உரையாடியவர் – திருமதி. லக்ஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் படத்தொகுப்பு – சரவணகுமரன்

Continue Reading »

மனிதத்தை மறைக்கும் மா’மத’ யானை

மனிதத்தை மறைக்கும் மா’மத’ யானை

மதம் எனும் கட்டமைப்பு அல்லது முறைமை எப்போது தோன்றியது என்பது புதிராகவே உள்ளது. வரலாற்றைப் பார்க்கும் பொழுது ஞானிகள், குருமார்கள் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டை, இலக்கணத்தை வரையறுத்தார்கள் என்பதை அறிய முடிகிறதே தவிர, மதம் எனும் மூல நம்பிக்கை உருவானது எப்போது என்பது தெரியவில்லை. மனிதன் தோன்றிய நாள் முதலே மதமும் தோன்றியது என்று புதைபொருள் ஆய்வாளர்களும் மானிடவியல் ஆய்வாளர்களும் சொல்கின்றனர். இக்கருத்துக்கு ஆதரவாகவோ, முரணாகவோ அழுத்தமான ஆதாரங்களை இவர்களால் தர முடியவில்லை என்பதால் இன்றும் […]

Continue Reading »

வெள்ளை நிறத்தொரு பூனை

Filed in கதை, வார வெளியீடு by on November 9, 2021 0 Comments
வெள்ளை நிறத்தொரு பூனை

எப்பொழுதும் கடும் வெயிலில் வாடும் சென்னை மாநகரம் அன்று  மார்கழி மாதக்  குளிரில் சற்றே நடுங்கி  கொண்டிருந்தது . விடியற்காலை மணி 6:30. பல்லாவரம் பெருமாள் கோவில் வாசலில் ஆண்டாளின் திருப்பாவையை, சில பக்தர்கள் பாடிக் கொண்டிருந்தனர்.  மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! பெருமாள் கோவில் பொங்கலுக்காக ஒரு கும்பல் காத்திருந்தது.  பாடுபவர்கள் இப்போதைக்கு முடிப்பதாக தெரியவில்லை!!  பொங்கலுக்காக நிற்கும் கும்பல் அங்கிருந்து நகருவதாகவும் தெரியவில்லை!! மாரிமுத்து இதைக் கவனித்தவாறே, தனது […]

Continue Reading »

அண்ணாத்தே திரைப்படம் – ஒரு திறனாய்வு

அண்ணாத்தே திரைப்படம் – ஒரு திறனாய்வு

நவம்பர் 05, 2021 – உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்களின் தீபத்தருநாளாம் தீபாவளி நாளான இன்று தங்கள் உற்றார் உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் இல்லங்களை விட அந்தந்த ஊர்களில் உள்ள திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்கும் ஒரு மகத்தான நாள். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி படம் வெளி வருகிறதென்றால் போதும் – வீடுகள் காலியாகவும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதி கரை புரண்டோடுவதும் அதிசயமல்ல. அப்படிப்பட்ட ஒரு தீபாவளித் திருநாளில் நானும் என் தர்மபத்தினியும் […]

Continue Reading »

இலங்கையின் பொருளாதாரம் நொடிக்கும் குண்டு

இலங்கையின் பொருளாதாரம் நொடிக்கும் குண்டு

இலங்கை பொருளாதாரம், ஏற்கனவே அவ்விட விலைவாசி உயர்வாலும், வெளிநாட்டு வர்த்தகப் பரிமாற்றங்களுக்கும் பணப் புழக்கம் இல்லாதிருந்த நிலையில் கொரோணாவின் பாதிப்புகளால் மேலும் நொடிக்கும் குண்டாக மாறியுள்ளது. நாட்டின் மத்திய வங்கி வருமானம் வராதிருப்பினும் 2021 ஆக்டோபர் மாதம் மாத்திரம் $640 மில்லியனுக்கு ஈடான இலங்கை ரூபாய் 130 பில்லியன் ரூபாய்க்கு நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டது. இது அவர்கள் பொருளாதாரப் பிரச்சனையின் மிகச் சிறிய பகுதி மாத்திரமே. டிசம்பர் 2019 இல் இருந்து ஆகஸ்ட் 2021 வரை, […]

Continue Reading »

Squid game

Squid game

திரைப்படங்களுக்கு இணையான எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் ஓடிடி வெப்சீரிஸ்கள் பெறத் தொடங்கி இப்போது பல நாட்களாகி விட்டது. சமீபத்தில் அப்படிப் பலமான வரவேற்பைப் பெற்ற வெப்சீரிஸ், செப்டம்பர் 17 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளிவந்த ”ஸ்க்யூட் கேம்” (Squid game) ஆகும். இது ஒரு கொரியன் சீரிஸ். முழுக்க முழுக்கக் கொரியர்கள் தயாரிப்பில், படமாக்கத்தில், நடிப்பில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுக்க வெளியிடப்பட்டுள்ளது. அதனால் யார் நடித்திருக்கிறார், இயக்கியிருக்கிறார் என ஜில் ஜங் ஜக் என்றெல்லாம் சொல்லி, உங்கள் வாய்க்கு […]

Continue Reading »

காற்றில் உலவும் கீதங்கள்

காற்றில் உலவும் கீதங்கள்

ரொம்பக் காலத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு ‘காற்றில் உலவும் கீதங்கள்’ பகுதியுடன் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. 2020 மார்ச் மாதம் இதன் சென்ற பகுதி வெளிவந்தது. கொரோனா அறிமுகமாகி எல்லோருக்கும் பீதியைக் கிளப்பி, மொத்த ஊரையும் மூடத் தொடங்கிய சமயம் அது. அதன் பிறகு, திரையரங்குகள் மூடப்பட்டதால், படங்கள், பாடல்கள் வெளியாகாமல் மூடங்கிப்போனது.   ‘பாக்கு வெத்தல’  திரையரங்குகள் மூடத் தொடங்கிய அந்த இறுதி வாரத்தில் ‘தாராள பிரபு’ வெளியாகி இருந்தது. வெளிவந்த வேகத்தில் தியேட்டர்கள் […]

Continue Reading »

LED LIGHTS

LED LIGHTS

நிலவைக் கண்காணிக்க சூரியன் நியமித்த சீலிப்பர் செல்கள்! இரவில் ஒமிழும் வெளிச்ச கூடுகள்! வண்ணத்துப்பூச்சிகளும் தேனிக்களும் சீருடை அணிந்து இரவு வேலைக்குத் தயாராகின்றன மதி குழம்பி!! பூக்கள் மொட்டு மலர தயக்கம் காட்டி மவுனம் காக்கின்றன!! நிலவு அவசரமாய் அறிவிக்க போகிறது இனி பகலிலும் தடை இன்றி ஒளிருவதாய்!’ மனிதர்கள் இரவைப் பகலாக்கி இன்பம் காண்பதாய் நினைத்து கொண்டு – உறவை வீணாக்கித் துன்பம் காண்கிறார்களோ இச்செயற்கை ஒளியில்?   – இளங்கோ சித்தன்

Continue Reading »

banner ad
Bottom Sml Ad